Show all

தினகரன் உறுதி! ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிட்டு சாகும் வரை உண்ணா நிலையிருக்க

04,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையால் வேளாண்மை, நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்நிலையில் அந்த ஆலையை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்ட நிலையில் அதற்கு எதிர்ப்பு கிளம்பியது. ஸ்டெர்லைட் ஆலையால் புற்றுநோய், மூச்சுதிணறல், இதய நோய் உள்ளிட்டவை ஏற்படுவதால் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என குமரரெட்டியாபுரம் மக்கள் 60 நாட்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை கண்டன பொதுக் கூட்டத்தில் தினகரன் கூறுகையில் ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிட்டு சாகும் வரை உண்ணா நிலையிருக்க முடிவு செய்துள்ளதாக உறுதியளித்துள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,760.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.