Show all

365 ஆக அதிகரித்துள்ளது! கொரோனா பாதிப்பிலிருந்து, தமிழகத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை

தமிழகத்தில் கொரோனா பாதித்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 365 ஆக அதிகரித்துள்ளது.

05,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் சிகிச்சைக்குப் பின்னர் குணமடைவது அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 82 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

நலங்குத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- 

தமிழகத்தில் இன்று 49 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் 1372 பேருக்கு மொத்தம் கொரோனா பாதித்துள்ளது. இன்று மட்டும் திருப்பூரில் 28 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இன்று மட்டும் 82 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்தம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 365 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகம் பரிசோதனை மையங்கள் உள்ளன. தமிழகத்தில் குணமடைந்து வருபவர்கள் விகிதம் அதிகரித்து வருகிறது. 

இன்று அதிகபட்சமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து 21 பேர்கள் வீடு திரும்பியுள்ளனர். அடுத்தபடியாக தேனியில் இருந்து 18 பேர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், என்பதாகும்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.