Show all

ஆஷஸ் தொடர்: பாலோ ஆன் ஆனது இங்கிலாந்து அணி

இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் ஓவலில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்க்ஸில் ஆஸ்திரேலியா அணி 125.1 ஓவரில் 481 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து அணி தரப்பில் ஸ்டோக்ஸ், பின், மொயீன் அலி தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்கள்.

அதை தொடர்ந்து முதல் இன்னிங்க்ஸை ஆடிய இங்கிலாந்து அணியின் அணைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்ததால் 149 ரன்களுக்கு ஆட்டம் இழந்து பலோ ஆன் ஆனது. இந்திய அணி சார்பில் ஜான்சன், மார்ஸ் தலா 3 விக்கெட்டுகளையும் லயன், சிடில் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பலோ ஆன் ஆனதால் இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்து விளையாடி வருகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.