Show all

இலங்கை அணி முதல் இன்னிங்க்ஸில் 306 ரன்கள் குவிப்பு

இந்தியா- இலங்கை அணிகளுக்கிடையேயான 2-வது டெஸ்ட் போட்டி பி. சாரா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 393 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. ராகுல் (108), கோலி (78), சர்மா (79), சஹா (56) ஆகியோர் சிறப்பாக விளையாடி ரன் குவிக்க காரணமாக இருந்தனர்.

பின்னர் முதல் இன்னிங்க்ஸை ஆடிய இலங்கை அணி 306 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. இலங்கை அணியில் அதிகபட்சமாக மேத்யுஸ் 102 ரன்களும் திரிமன்னே 62 ரன்களும் குவித்தனர். இந்திய அணி சார்பில் மிஸ்ரா 4 விக்கெட்டுகளையும் அஸ்வின்,சர்மா தலா 2 விக்கெட்டுகளையும் பின்னி, யாதவ் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

அதன் பின்னர் 87 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்க்ஸை ஆடிய இந்திய அணி மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 70 ரன்களை சேர்த்தது. முரளி விஜய் 39 ரன்களுடன் ரஹானே 28 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.