Show all

காமன்வெல்த் மாநாட்டை இந்தியாவின் கடும் எதிர்ப்பை அடுத்து பாகிஸ்தான் ரத்து செய்துள்ளது

இஸ்லாமாபாத்தில் அடுத்த மாதம் நடைபெறவிருந்த காமன்வெல்த் மாநாட்டை இந்தியாவின் கடும் எதிர்ப்பை அடுத்து பாகிஸ்தான் ரத்து செய்துள்ளது.

காமன் வெல்த் நாடுகளின் அவைத் தலைவர்கள் கலந்து கொள்ளும் மாநாடு, பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் அடுத்த மாதம் 30ம் தேதி தொடங்கி அக்டோபர் மாதம் 8ம் தேதி வரை நடைபெறுவதாக இருந்தது. இந்த மாநாட்டில் பங்கேற்க ஜம்மு காஷ்மீர் சட்டசபை சபாநாயகருக்கு அழைப்பிதழை அனுப்பாமல் பாகிஸ்தான் புறக்கணித்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மாநாட்டில் பங்கேற்கப் போவதில்லை என இந்தியா அறிவித்தது. இந்நிலையில் மாநாட்டை ரத்து செய்து விட்டதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

இந்தியாவின் கடும் எதிர்ப்பை அடுத்து மாநாட்டை பாகிஸ்தான் ரத்து செய்துள்ளது. மாநாட்டை ரத்து செய்தாலும், அமெரிக்காவில் மாநாடு நடைபெறும் என்றும், அந்த மாநாட்டில் காஷ்மீர் குறித்த விவரங்களை அறிவிக்கப் போவதாகவும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.