இலங்கையில் நடைபெற்ற தேர்தலில் தோற்றதிற்கு தமிழர்களே காரணம் என்று கூறி சிறையில் தங்களை அதிகாரிகள் கொடுமைப்படுத்துவதாக கூறி தமிழ்ச்சிறைவாசிகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியாகியதைத் தொடர்ந்து, அனுராதபுரம் சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள தமிழ்ச்சிறைவாசிகள் வதைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து அவர;கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்றைய தினம் 49; தமிழ்ச்சிறைவாசிகள் சிறிய அறையொன்றுக்கு மாற்றப்பட்டு, அவர்களுக்கு கழிப்பிட வசதிகளையேனும் செய்து கொடுக்கப்படவில்லை என்றும் ஆட்சிமாற்றத்திற்கு தமிழர்களே
காரணம் என்பதைப் போல சிறை அதிகாரிகள் நடந்து கொள்வதாகவும், கடும் தொனியில் எச்சரிப்பதாகவும்; குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில், தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறு கோரி, இந்தத் தமிழ்ச்சிறைவாசிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.