Show all

நடராஜன் என்ன சொல்கிறார்! நடராஜன் புகழ்பாடி கொண்டாடும் தமிழகம்

இந்திய அணிக்காக அறிமுகமாகி மட்டையிலக்கு வீழ்த்தியது கனவுபோல் இருந்தது என்கிறார் தமிழகம் கொண்டாடும் தமிழகத் துடுப்பாட்ட இளம் வீரர் நடராஜன்

12,தை,தமிழ்த்தொடராண்டு-5122: இந்திய அணிக்காக ஆஸ்திரேலியா மண்ணில் அறிமுகமாவேன் என எதிர்பார்க்கவில்லை, முதல் போட்டியில் நெருக்கடியில் விளையாடினேன் என துடுப்பாட்ட இளம் வீரர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணியில் வலைப்பயிற்சி பந்து வீச்சாளராக தேர்வு செய்யப்பட்டார். அதன்பின் இந்திய அணியிலும் அறிமுகம் ஆனார்.

முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் இந்தியா தோல்வியடைந்து தொடரை இழந்தது. இவர் அறிமுகமான 3-வது ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. அதன்பின் தொடர்ந்து இரண்டு டி20 போட்டிகளை வென்று தொடரை கைப்பற்றியது. பிரிஸ்பேன் தேர்வில் இந்தியா அருமையான வெற்றி பெற்றது. இதில் அறிமுகமான துடுப்பாட்ட இளம் வீரர் நடராஜன் மூன்று மட்டையிலக்குகளைச் சாய்த்தார்.

வெற்றிக் களிப்பில் சொந்த ஊர் திரும்பிய நடராஜன், இன்று சேலம் சின்னப்பட்டியில் இதழியலாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது ‘‘என்னுடைய பணியைச் செய்வதில் கவனம் செலுத்தினேன். ஒருநாள் போட்டியில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள விரும்பினேன். விளையாடியதும், மட்டையிலக்கு வீழ்த்தியதும் கனவுபோல் இருந்தன.

இந்தியாவுக்காக விளையாடிய மகிழ்ச்சியைச் சொற்களால் வெளிப்படுத்த முடியாது. அது ஒரு கனவு போன்றது. நான் பயிற்சியாளர்களிடம், வீரர்களிடம் இருந்து அதிகமான ஆதரவை பெற்றேன். அவர்கள் ஆதரவு தந்து என்னை மிகவும் சிறப்பாக ஊக்குவித்தனர். அவர்கள் எனக்கு பின்னால் இருந்ததால், சிறப்பாக செயல்பட முடிந்தது.

விராட் கோலி, ரகானே ஆகியோர் என்னை சிறப்பாக கையாண்டனர். என்னிடம் நேர்மையான பாடுகளை கூறினர். இருவருக்கும் கீழ் மகிழ்ச்சியாக விளையாடினேன்’’ என்றார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.