Show all

தமிழ்நாடு முதல்வர் வாழ்த்து! 14 முறை வாகையரான இந்தோனேசியாவை வீழ்த்தி முதல் முறையாக வென்றது இந்தியா

14 முறை வாகையராக இருந்த இந்தோனேசியாவை வீழ்த்தி இந்திய சிறகுபந்தாட்ட வீரர்கள் முதல் முறையாக கோப்பையை வென்றது மகிழ்ச்சி அளிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாரட்டி உள்ளார்.

01,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5124: தாய்லாந்தில் நடைபெற்ற தாமஸ் கோப்பை சிறகுப்பந்து தொடரை, முதன்முறையாக இந்தியா வென்றுள்ளது. இன்று நடைபெற்ற இறுதிச் சுற்றில், பலம் வாய்ந்த இந்தோனேசிய அணியை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி வீழ்த்தியது. கோப்பை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் உள்ளன.

இந்நிலையில், தாமஸ் கோப்பை பேட்மிண்டன் போட்டியில் வாகையர் பட்டம் வென்ற இந்திய அணிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

14 முறை வாகையராக இருந்த இந்தோனேசியாவை வீழ்த்தி இந்தியா முதல் முறையாக கோப்பையை வென்றது மகிழ்ச்சி அளிப்பதாகவும், வரலாற்று வெற்றியை இந்தியாவுக்கு பெற்றுத் தந்த வீரர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார். 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,249.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.