Show all

2-வது ஒருநாள் போட்டியிலும் வென்றது ஆஸ்திரேலியா: ரோஹித் சதம் மீண்டும் வீண்

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.  முன்னதாக டாஸ்வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 308 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் அதிக பட்சமாக ரோஹித் சர்மா  124 ரன்களும் ரஹானே 89 ரன்களும் குவித்தனர்.

இதனையடுத்து 309 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 49 ஓவர்களில் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 309ரன்கள் எடுத்து இந்தியாவை வீழ்த்தியது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் அதிக பட்சமாக பின்ச் மற்றும் மார்ஸ்தலா 71 ரன்கள் குவித்தனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.