எல்லை தாண்டிய தாக்குதல், தீவிரவாதிகளுக்கு ஆதரவு போன்ற பாகிஸ்தானின் நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், இருநாட்டு கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான போட்டிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. கடந்த பல ஆண்டுகளாக இருநாட்டு அணிகளுக்கு இடையிலான நேரடி போட்டிகள் நடைபெறாவிட்டாலும்,சர்வதேச போட்டிகளில் இரு அணிகளும் விளையாடின.
கராச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய ஷஹர்யார் கூறியது: பிசிசிஐ-யிடம் தொடர்பு கொண்டு வருகிறோம். காங்கிரஸ் ஆட்சியின்போது கையெழுத்தான இந்த ஒப்பந்தத்தை செயல்படுத்த இந்தியாவில் அமைந்துள்ள மோடி தலைமையிலான புதிய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன். இருநாட்டு அரசியல் விவகாரங்கள், கிரிக்கெட் போட்டியை பாதிக்கக்கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.