Show all

வீராட்கோலி இந்திய ஏ அணிக்காக சென்னையில் விளையாடுகிறார்

இந்திய அணி வருகிற 12–ந் தேதி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்டில் விளையாட இருக்கிறது. இலங்கையை போன்ற தட்பவெப்ப நிலை, ஆடுகள தன்மை சென்னையில் இருக்கும். இதன் காரணமாகவே வீராட்கோலி இந்திய ‘ஏ’ அணிக்காக சென்னையில் விளையாடுகிறார். இந்திய அணி இங்கிருந்து தான் வருகிற 3–ந் தேதி இலங்கை புறப்பட்டு செல்கிறது.

ஆஸ்திரேலிய ‘ஏ’ கிரிக்கெட் அணி சென்னையில் விளையாடி வருகிறது. அந்த அணி இந்திய ‘ஏ’ அணியுடன் மோதிய முதல் 4 நாள் டெஸ்ட் போட்டி ‘டிரா’ ஆனது.

இரு அணிகள் மோதும் 2–வது மற்றும் கடைசி 4 நாள் டெஸ்ட் சேப்பாக்கம் மைதானத்தில் வருகிற 29–ந் தேதி தொடங்குகிறது. இந்தப் போட்டியில் இந்திய ‘ஏ’ அணிக்காக டெஸ்ட் கேப்டன் வீராட்கோலி விளையாடுகிறார். இதற்காக அவர் சென்னை வந்துள்ளார். அவர் இந்திய ‘ஏ’ அணி வீரர்களுடன் இணைந்து இன்று பயிற்சியில் ஈடுபட்டார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.