Show all

இரண்டு உலகச் சாம்பியன் பட்டம் வென்ற 10 வயது இந்திய சிறுவன்

சர்வதேச ஜூனியர் கோல்ப் அகடாமியின் உலக நட்சத்திரங்கள் பங்கேற்கும் உலக கோல்ப் போட்டி லாஸ் வேகாஸில் நடைபெற்றது. இரண்டு அமெரிக்க சிறுவன் மற்றும் ஒரு தாய்லாந்து சிறுவனுடன் சேர்ந்து இந்தியாவின் அரியானா மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்த சுபம் ஜக்லான் என்ற 10 வயது சிறுவனும் பந்தயத்தில் இறங்கினார். இதில் 106 புள்ளிகள் பெற்று சுபம் ஜக்லான் உலக கோல்ப் சாம்பியன் பட்டம் வென்றார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை கலிபோர்னியாவில் நடைபெற்ற ஜூனியர் உலக கோல்ப் போட்டியில் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற சுபம், இந்த வாரத்தில் மற்றொரு சாம்பியன் பட்டத்தை வென்று சாதனைப் படைத்துள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.