2015-2016 ஆம் ஆண்டுகான உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் அட்டவணையை இன்று பிசிசிஐ வெளியிட்டது. இதில், சுமார் 50 ஆண்டு கால பழமை வாய்ந்த உள்ளூர் மண்டல போட்டியான துலிப் கோப்பை ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் அதிகப்படியான உள்ளூர் மற்றும் சர்வதேச போட்டிகள் காரணமாக துலிப் கோப்பை தொடர் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பபட்டுள்ளது.
முன்னாள் வீரர்கள் கே எஸ் துலீப்சிங்ஜி மற்றும் அவரது மருமகன் கே.எஸ் ரஞ்சித்சிங்ஜி ஆகியோர் நினைவாக துலிப் கோப்பை என்னும் உள்ளூர் மண்டல போட்டி 1961-62 ல் இருந்து நடத்தப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.