மகாராஷ்டிரா மாநிலத்தில் நிகழ்ந்த பண இயந்திரத் தகர்ப்பு மற்றும் கொள்ளையடிப்பு தொடர்பாக மூன்று பேரை காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். 12,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள சிம்பாலி கிராமப்பகுதியில் தனியார் வங்கிக்குச் சொந்தமான பண இயந்திரம் அமைந்துள்ளது. நேற்று நள்ளிரவு பண இயந்திர மையத்திற்குள் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த எந்திரத்தை வெடிபொருள் மூலம் உடைத்தனர். பின்னர் அதில் இருந்த 16 லட்சம் ரூபாய் பணத்தை அவர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். தெனாவெட்டாக தகர்க்கப்பட்ட பண இயந்திரத்தி;ன் பாகங்களை அருகில் இருந்த பகுதியில் அவர்கள் வீசி சென்றனர். இதைக் கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து அருகில் உள்ள காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். அவர்கள் நடத்திய விசாரணையின் முடிவில் மூன்று கொள்ளையர்கள் இந்த கொள்ளை அதிரடியில் ஈடுபட்டிருந்தது தெரிய வந்துள்ளது. அவர்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் மூன்று முறை இதேபோன்று பண இயந்திரம் வெடி வைத்து உடைத்து பணத்தை கொள்ளையடிக்கும் முன்னெடுப்புகள் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,110.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.