Show all

வாவ்… நீங்கள்தாம் கெத்து! வாழ்த்துக்கள் கோவை மற்றும் சென்னை வாழ்மக்களே

இந்தியாவில் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற குற்றங்கள் குறைவாக பதிவான பெருநகரங்களில் தமிழ்நாட்டின் கோவை முதல் இடத்தையும், சென்னை இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளது. 

31,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: இந்தியாவில் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற குற்றங்கள் குறைவாக பதிவான பெருநகரங்களில் தமிழ்நாட்டின் கோவை முதல் இடத்தையும், சென்னை இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளது. 

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான அதிக குற்றங்கள் பதிவான பெருநகரங்களில் உத்தரபிரதேச மாநிலத்தின் லக்னோ முதல் இடம் பிடித்துள்ளது.

இந்தியாவில் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற குற்றங்களில் தொடர்பாக கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விவரங்களை ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் ஒன்றியக் குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டு இருக்கிறது.

அந்த வகையில், இந்தியாவில் 19 பெருநகரங்களில் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற குற்றங்கள் குறித்த தகவல்களை ஒன்றியக் குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டது. 

அதன்படி, இந்தியாவில் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற குற்றங்கள் குறைவாக பதிவான பெருநகரங்களில் தமிழ்நாட்டின் கோவை முதல் இடத்தையும், சென்னை இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளது. 

கோவை பெருநகரத்தை பொறுத்தவரை சராசரியாக 1 லட்சம் பெண்களில் 9 பேருக்கு எதிராக குற்ற நிகழ்வுகள் பதிவாகியுள்ளது எனவும், சென்னையை பொறுத்தவரை சராசரியாக 1 லட்சம் பெண்களில் 13.4 பேருக்கு எதிராக குற்ற நிகழ்வுகள் கடந்த ஆண்டு பதிவாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை, சென்னையை அடுத்து பெண்களுக்கு எதிரான குறைவான குற்ற நிகழ்வுகள் பதிவான பெருநகரங்களில் 3-வது இடத்தில் கேரளாவின் கொச்சி நகரம் இடம்பெற்றுள்ளது. கொச்சியில் சராசரியாக 1 லட்சம் பெண்களில் 37.5 பேருக்கு எதிராக குற்ற நிகழ்வுகள் பதிவாகியுள்ளது. மகாராஷ்டிராவின் மும்பையில் சராசரியாக 1 லட்சம் பெண்களில் 53.8 பேருக்கு எதிராக குற்ற நிகழ்வுகள் பதிவாகியுள்ளது. கர்நாடகாவில் பெங்களூரில் 1 லட்சம் பெண்களில் 67.3 பேருக்கு எதிராக குற்ற நிகழ்வுகள் பதிவாகியுள்ளது.

பெண்களுக்கு எதிராக அதிக குற்ற நிகழ்வுகள் பதிவான பெருநகரங்களில் உத்தரபிரதேச மாநிலத்தின் லக்னோ முதல் இடத்தில் உள்ளது. லக்னோவில் சராசரியாக ஒருலட்சம் பெண்களில் 190.7 பேருக்கு எதிராக குற்ற நிகழ்வுகள் பதிவாகியுள்ளதாக என ஒன்றியக் குற்ற ஆவண காப்பக அறிக்கை தெரிவித்துள்ளது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,008.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.