Show all

பதினான்காமவரும் காலமானார்! குன்னூர் உலங்கி விபத்தில் பாதித்து சிகிச்சை பெற்றுவந்த அணித்தலைவர் வருண்சிங்

குன்னூர் உலங்கி விபத்தில் பாதித்து சிகிச்சை பெற்றுவந்த விமானப்படை அணித்தலைவர் வருண் சிங் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். இதன்மூலம் உலங்கியில் பயணம் செய்த 14 பேரும் காலமாகியுள்ளனர்.

29,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: குன்னூர் உலங்கி விபத்தில் படுகாயமடைந்து பெங்களூரு சேனை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அணித் தலைவர் வருண் சிங் சிகிச்சை பலனின்றி காலமானார்.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் நடந்த சேனை உலங்கி விபத்தில் பயணம் செய்த 14 பேரில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் காலமாகியுள்ளனர். இதில் விமானப்படை அணித்தலைவர் வருண் சிங் மட்டும் 80 விழுக்காட்டுப் படுகாயத்துடன் மீட்கப்பட்டு குன்னூர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார்.

பின்னர், மேற்சிகிச்சைக்காக பெங்களூரு சேனை மருத்துவமனையில் வருண் சிங் அனுமதிக்கப்ட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில், வருண் சிங் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். இதன்மூலம் உலங்கியில் பயணம் செய்த பதினான்கு பேரும் காலமாகியுள்ளனர்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,098.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.