Show all

இந்தியாவின் முதல் ஐந்து ஏழையர் மாநிலங்கள்! பீகார், ஜார்கண்ட், உத்தர, மத்திய பிரதேசங்கள், மேகாலயா

பீகார், ஜார்கண்ட், மேகாலயா, உத்தரப்பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களை இந்தியாவிலேயே மிகவும் ஏழை மாநிலங்கள் என்று இந்தியாவை மாற்றுவதற்கான ஒன்றிய நிறுவனம் அறிவித்துள்ளது.

11,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: இந்தியாவை மாற்றுவதற்கான ஒன்றிய நிறுவனம் (நிட்டி அயோக்) வெளியிட்டுள்ள வறுமைக் குறியீட்டின் படி பீகார், ஜார்கண்ட், மேகாலயா, உத்தரப்பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களை இந்தியாவிலேயே மிகவும் ஏழை மாநிலங்கள் என்று அறிவித்துள்ளது.

இந்தியாவை மாற்றுவதற்கான ஒன்றிய நிறுவனம் வெளியிட்டுள்ள வறுமைக் குறியீட்டின் படி பீகார் மாநிலத்தில் 51.9 விழுக்காட்டு மக்கள் ஏழ்மையில் உள்ளனர், இதைத் தொடர்ந்து ஜார்கண்ட் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் 42.16 விழுக்காட்டு மக்களும், உத்தரப் பிரதேசத்தில் 37.79 விழுக்காட்டு மக்களும், மத்திய பிரதேசத்தில் 36.35 விழுக்காட்டு மக்களும், மேகாலயா மற்றும் அசாம் மாநிலத்தில் தலா 32.67 விழுக்காட்டு மக்களும், ஏழ்மையில் உள்ளதாகத் தெரிவித்துள்ளது. 

இதேபோல் ஏழை மக்கள் குறைவாக இருக்கும் மாநிலத்தில் தமிழ்நாடு, கேரளா, கோவா, சிக்கிம், மற்றும் பஞ்சாப் ஆகியவை முதல் ஐந்து இடங்களைப் பிடித்துள்ளன. கேரளா மக்கள் தொகையில் 0.71 விழுக்காட்டு மக்களும், கோவாவில் 3.76 விழுக்காட்டு மக்களும், சிக்கிமில் 3.82 விழுக்காட்டு மக்களும், தமிழ்நாட்டில் 4.89 விழுக்காட்டு மக்களும், பஞ்சாபில் 5.59 விழுக்காட்டு மக்களும்,  ஏழ்மையில் உள்ளதாக அறிவித்துள்ளது.   

இதேபோல் ஒன்றியப் பகுதிகள் பிரிவில் புதுச்சேரியில் 1.72 விழுக்காட்டு மக்களும், லட்சத்தீவில் 1.82 விழுக்காட்டு மக்களும், அந்தமான் நிக்கோபார் தீவில் 4.30 விழுக்காட்டு மக்களும், டெல்லியில் 4.79 விழுக்காட்டு மக்களும், சண்டிகரில் 5.97 விழுக்காட்டு மக்களும், ஏழ்மையில் உள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த பல்பரிமாண ஏழ்மைப் பிரிவை ஒன்றிய அரசு குடும்ப நலங்குநிலை ஆய்வின் படி பிரித்துள்ளது. இதன் மூலம் ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் ஏழ்மையை ஒழிக்கும் வகையில் சிறப்புத் திட்டத்தை இப்பிரிவு மக்களுக்காக அளிக்க முடியும் என்பது தாம் அரசின் திட்டம். 

இந்தியாவின் இந்தப் பல்பரிமாண ஏழ்மைப் பிரிவு அளவீட்டைக் கல்வி, நலங்குநிலை, வாழ்க்கைத் தரம் என மூன்று பிரிவுகளாகச் சம பங்கு உடன் பிரிக்கப்பட்டு உள்ளது. 

இதை ஊட்டச்சத்து, குழந்தைகள் மற்றும் இளம்பருவ இறப்பு, மகப்பேற்றுக்கு முந்தைய பராமரிப்பு, பள்ளிப்படிப்பு, பள்ளி வருகை, சமையல் எரிபொருள், நலங்குநிலை, குடிநீர், மின்சாரம், வீடு, சொத்துக்கள் மற்றும் வங்கிக் கணக்குகள் என 12 துணை பிரிவுகளின் கீழ் பிரிக்கப்படுகிறது. 

இந்தியாவை மாற்றுவதற்கான ஒன்றிய நிறுவனம், இந்தியாவின் பல்பரிமாண ஏழ்மைப் பிரிவு அளவீடு குறித்து முழுமையான புரிதலைக் கால அடிப்படையில் அளிக்கும். இனி வரும் காலத்தில் இத்தரவுகளை வைத்து நாட்டின் ஏழமையைச் சிறப்பான முறையில் கையாள முடியும் என நித்தி அயோக் அமைப்பு அறிவித்துள்ளது.

ஆனால் ஒன்றிய பாஜக அரசின் அனைத்துச் சட்ட திட்டங்களும் இதுபோன்ற ஏழைகள் மற்றும் கார்ப்பரேட்டுகள் மட்டுமான (நடுத்தட்டு மக்கள் இல்லாத) இந்தியாவை எதிர் நோக்கியதாகவே உள்ளது. 

இந்தக் கொள்கைப்பாட்டைக் கடந்து இந்தியாவை மாற்றுவதற்கான ஒன்றிய நிறுவனம் எவ்வாறு நாட்டின் ஏழமையைச் சிறப்பான முறையில் கையாள முடியும் என்பதற்கான திட்டங்;களையும் ஒருங்கிணைத்துக் கொள்ள- இந்தியாவை மாற்றுவதற்கான ஒன்றிய நிறுவனப் பொறுப்பாளர்களுக்கு- வேண்டுகோளும், வாழ்த்துக்களும்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,080.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.