Show all

பொது பங்கு வெளியிடும் சிறீராம் மனை வணிக நிறுவனம்!

தென் இந்தியாவில் முதல் 5 என்ற இலக்கினில் இருந்து வரும் சிறீராம் மனைவணிக நிறுவனம். வரும் புதியம் கிழமையில் தனது பொதுப் பங்கு வெளியீட்டினை முன்னெடுக்கவுள்ளது.

19,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: தென் இந்தியாவைத் தளமாகக் கொண்ட பல்வேறு வணிகங்களை செய்து வரும் சிறீராம் குழுமம், மனை வணிகத்திலும் பேரறிமுகமான நிறுவனமாக இருந்து வருகின்றது. அதனை சிறீராம் பிராபர்டீஸ் என்ற பெயரில் செய்து வருகின்றது.   

இந்தச் சிறீராம் குழுமம், 40 ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றது. தென் இந்தியாவில் முதல் 5 என்ற இலக்கினில் இருந்து வருகின்றது சிறீராம் பிராபர்டீஸ் நிறுவனம். 

இந்தச் சிறீராம் மனைவணிக நிறுவனம் தான் வரும் புதியம் கிழமையில் தனது பொதுப் பங்கு வெளியீட்டினை முன்னெடுக்கவுள்ளது. வியாழக்கிழமை அன்று முடிவடையவுள்ளது. இதன் பங்கு ஒதுக்கீடு அடுத்த புதியம் அன்று செய்யப்படவுள்ளது. பங்கு கிடைக்காதவர்களுக்கு அடுத்த வியாழக்கிழமை அன்று பணம் திரும்ப தரப்படவுள்ளது. 

இதனையடுத்து ஒன்றிய மற்றும் மும்பை பங்குச் சந்தையில் 5,மார்கழி (டிசம்பர்20) அன்று சிறீராம் மனை வணிக நிறுவனப் பங்குகள் பட்டியலிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறீராம் பிராபர்டீஸ் நிறுவனத்தின் பொதுப்பங்கு விலை 113 - 118 ரூபாயாக இருக்கும். 

தற்போதைய நிலவரப்படி பெங்களூர், சென்னை, ஹைத்ராபாத், கொல்கத்தா, கோயமுத்தூர், விசாகபட்டிணம் உள்ளிட்ட நகரங்களில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. ஏற்கனவே பல திட்டங்களை முடித்துள்ள நிலையில், இன்னும் பல புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. 

முதலீட்டாளார்கள் குறைந்தபட்சம் 125 பங்குகள் ஒரு தொகுப்பு என நிர்ணயம் செய்துள்ளது. இதற்காக 14,750 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். அதிகபட்சமாக 13 தொகுப்புகளை முதலீடு செய்து கொள்ளலாம். இதற்கு அதிகபட்சமாக 1,91,750 ரூபாயாக முதலீடு செய்ய வேண்டியிருக்கும். 

சில்லறை முதலீட்டாளர்கள் அதிகபட்சம் 2 லட்சம் ரூபாய் வரையில் முதலீடு செய்ய அனுமதிக்கப்படலாம். இந்த பங்கு வெளியீட்டில் புதிய வெளியீடாக 250 கோடி ரூபாயாகவும், 350 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குதாரர்களின் பங்குகளையும், இது தவிர 25 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளையும் விற்பனை செய்யப்படவுள்ளது. 

மொத்த பங்கு வெளியீட்டில் 75விழுக்காடு தகுதி வாய்ந்த நிறுவனங்களும், 10விழுக்காடு சில்லறை முதலீட்டாளர்களுக்கும், 15 நிறுவனம் அல்லாத முதலீட்டாளர்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 3 கோடி பங்குகள் ஊழியர்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,088.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.