Show all

150 கோடி தொகை பறிமுதல்! உத்தரபிரதேச மாநில, தொழில் அதிபர் வீட்டில், முன்னெடுத்த வருமானவரி சோதனையில்

உபி தொழிலதிபர் வீட்டில், பல மணி நேரமாக நீடித்து வரும் வருமானவரிச் சோதனையில், ரூபாய் 150 கோடி தொகையாகப் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

09,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: உத்தரபிரதேச மாநிலத்தில் தொழில் அதிபர் வீட்டில் 150 கோடி தொகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தின் பேரறிமுகத் தொழில் அதிபரான பியூஸ் ஜெயினுக்குச் சொந்தமான வீடு, அலுவலகம், தொழிற்சாலை, குளிர்பான கிடங்கு, பெட்ரோல் நிலையத்தில் நேற்று காலை 11 மணிக்கு திடீரென வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்த தொடங்கினர்.

பல மணி நேரமாக நீடித்து வரும் சோதனையில் ரூபாய் 150 கோடி தொகையாகப் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக முதற்கட்டமாக வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

பியூஸ் ஜெயினுக்குச் சொந்தமான அனந்தபுரி இல்லத்தில் பணம் எண்ணும் 4 இயந்திரங்கள் உதவியுடன் கைப்பற்றப்பட்ட பணத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் எண்ணி வருகின்றனர். 

இதுவரை 150 கோடி ரூபாய் தொகை எண்ணப்பட்டுள்ளதாகவும், சரக்குசேவைவரி முறைகேடுகளும் நடந்துள்ளாதாக, சரக்குசேவைவரித் துறை சார்ந்த அதிகாரிகளுக்கும் தகவல் கொடுக்கப்பட்டதின் பேரில் சரக்குசேவைவரித் துறை அதிகாரிகளும் வரி ஏய்ப்பு தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரை தவிர மும்பை, குஜராத் மாநிலத்திலும் இவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இவருக்கு சொந்தமான தொழிற்சாலையில் சரக்குகளை அனுப்ப தயாராக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

ஒரே வீட்டில் இருந்து 150 கோடி ரூபாய் தொகை கைப்பற்றபட்டுள்ள நிலையில் பணத்தை பாதுகாக்க துணைச் சேனை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,107.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.