Show all

புதுக்கவிதையாகிற போதை வழக்கு! இலஞ்சம் வாங்கினேன், கைது செய்தார்கள்- இலஞ்சம் கொடுத்தேன், விட்டு விட்டார்கள் என்பதான

இலஞ்ச ஒழிப்பு நிலைப்பாட்டு நடைமுறைகள் குறித்து: இலஞ்சம் வாங்கினேன், கைது செய்தார்கள்- இலஞ்சம் கொடுத்தேன், விட்டு விட்டார்கள் என்பதான ஒரு புதுக்கவிதை எழுதினார் ஒரு கவிஞர். அந்தக் கவிதையாகி நிற்கிறது, ஆர்யன் கான் கைது

11,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: நடிகர் சாருக்கான் மகன் ஆர்யன் கான் போதை பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கில் அடுத்தடுத்து பல திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. 

இந்த வழக்கை விசாரித்து வரும் சமீர் வான்கடே லஞ்ச புகாரில் சிக்கி உள்ளார். தனியார் துப்பறிவாளர் என்று அறியப்படும் கிரண் கோசாவி மூலம் இந்த வழக்கில் போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வான்கடே உள்ளிட்டோருக்கு லஞ்சம் வழங்க முயற்சிகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.

சமீர் வான்கடே உள்ளிட்டோர் கிரண் கோசாவி உதவியோடு லஞ்சம் வாங்க முயன்றதாகவும். ஆர்யன் கானை விடுவிக்க கிரண் கோசாவி 18 கோடி ரூபாய் கேட்டதாகவும். அதில் 8 கோடி ரூபாய் சமீர் வான்கடேவிற்கு செல்லும் என்று பேரம் பேசியதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது.

கிரண் கோசாவியின் பாதுகாலவர் என்று சொல்லப்படும் பிராபகர் செயில் மும்பை சிறப்பு அறங்கூற்றுமன்றத்தில் பதிகை செய்த உறுதிச்சான்றில் இந்த விவரங்களை வெளியிட்டுள்ளார். இதனால் சமீர் வான்கடே லஞ்ச புகாரில் சிக்கி உள்ளார். தலைமறைவாக இருந்து லஞ்ச பேரம் பேசிய கிரண் கோசாவி இன்று புனேவில் பிடிபட்டார். இதனால் லஞ்ச புகார் குறித்த முழு விவரங்கள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் சமீர் வான்கடே இந்தப் போதை பொருள் வழக்கை தொடர்ந்து விசாரிப்பார் என்று போதை பொருள் தடுப்பு பிரிவின் லஞ்ச ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இவரிடம் நடத்தப்பட்ட துறைப்பாடான விசாரணையின் முடிவில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சமீர் வான்கடேவிற்கு எதிராக உறுதியான ஆதாரங்கள் வெளியிடப்படும் வரையில், சமீர் வான்கடே இந்த போதை பொருள் வழக்கை தொடர்ந்து விசாரிப்பார் என்று கூறியுள்ளது.

இன்னொரு பக்கம் இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு வரும் அனைத்து விதமான லஞ்ச புகார்கள் குறித்தும் மும்பை காவல்துறை தனியாக விசாரிக்க உள்ளது. இதற்காக சிறப்பு அணியை மும்பை காவல்துறையினர் உருவாக்கி உள்ளனர். பிரபாகர் செயில், வழக்கறிஞர்கள் சுதா திவேதி, கனிஸ்கா உள்ளிட்ட பலர் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடக்க உள்ளது.

எல்லா புகாரையும் சேர்த்து ஒன்றாக விசாரிக்க உள்ளனர். மும்பை தெற்கு கூடுதல் ஆணையர் திலீப் சாவந்த் இந்த விசாரணையை மேற்பார்வையிடுவார். காவல்துறை துணை ஆணையர் ஹேம்ராஜ் சிங் இவருக்கு உதவியாக இருப்பார். ஆய்வாளர்கள் உள்ளிட்ட காவலர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இதனால் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் போதை பொருள் தடுப்பு பிரிவு மும்பை காவல்துறையினரின் விசாரணை வளையத்திற்குள் வந்துள்ளது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,050.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.