Show all

வெளங்கீடும் என்ற திறனாய்வு இணையத்தைக் கலக்கி வருகிறது! யோகி ஆதித்யநாத் கவிதைக்கு

படங்கள் சொல்லும் செய்தி: புதிய இந்தியாவை உருவாக்க யோகி ஆதித்யநாத்துடன் தலைமைஅமைச்சர் மோடி ஆலோசனையாம்.

06,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: தலைமை அமைச்சர் நரேந்திர மோடி தன் தோளில் கை போட்டபடி நடக்கும் இரண்டு புகைப்படங்களை, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடக்கிறது. அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, உத்தரப்பிரதேசத் தலைநகர் லக்னோவுக்கு அண்மையில் வந்த தலைமைஅமைச்சர் நரேந்திர மோடி, ஆளுநர் மாளிகையில் தங்கினார். காலையில் முதல்வர் யோகி, தலைமைஅமைச்சரைச் சந்திக்க ஆளுநர் மாளிகைக்கு சென்றார். அப்போது, யோகி தோளில் கை போட்டபடி நடந்தவாறே தலைமைஅமைச்சர் மோடி நீண்ட கதையாடல் நடத்தினார்.

அந்தப் பெருங்கதையாடல் காட்சிப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள யோகி ஆதித்யநாத், ஹிந்தியில் கவிதை ஒன்றும் எழுதி உள்ளார். அதில், புதிய இந்தியாவை உருவாக்குவது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.

அந்தப்படமும், அந்தப்படத்திற்கான கவிதையும், பாஜக ஆதரவு ஊடகங்கள் ஒரு பக்கம் கொண்டாடவும், சமூக ஆர்வலர்கள் அந்தப்படத்திற்கும் கவிதைக்கும் 'வெளங்கீடும்' என்று பதிவிட்ட திறனாய்வு வெளியிடவும் இணையம் கலக்கப்பட்டு வருகிறது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,075.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.