Show all

இந்த எளிமை கடுமையாகிறது! ஆதாய அட்டை இயங்கலை புழக்கத்தில்: அடுத்த ஆங்கில ஆண்டிலிருந்து

பணம் வழங்கும் இயந்திரங்களில் பணமெடுக்கும் அட்டைகள் மூலமாக இயங்கலையில் பணம் சொலுத்திகிறவர்களுக்கு இதுவரை அட்டை எண்ணை ஒரு முறை பதிவு செய்தால் போதும் என்றிருந்த நிலை- மாற்றப்படுகிறது.

06,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: இயங்கலையில் ஆதாய அட்டை மூலம் பணம் செலுத்தி பொருள்; வாங்கி வந்தவர்கள், இனி ஒவ்வொரு முறையும் முழு அட்டை விவரங்களையும் பதிவிட வேண்டும்.

ஏனெனில், வாடிக்கையாளர்களின் ஆதாயஅட்டை மற்றும் கடன்அட்டை விவரங்களை வணிக நிறுவனங்கள் சேமித்து வைக்க இந்தியக்கட்டுபாட்டு வங்கி தடை விதித்துள்ளது. இந்தத் தடை நாளது 17,மார்கழி (ஜனவரி 1) முதல் நடைமுறைக்கு வருகிறது. 

வழக்கமாக இயங்கலையில் கேட்பு அளிக்கும் பொருளுக்கு ஆதாய அட்டை மூலம் பணம் செலுத்துவோர்களின் ஆதாய அட்டை விவரங்கள் முதல் முறை பயன்பாட்டின் போது வணிக நிறுவனங்களால்  சேமிக்கப்பட்டுவிடும். எனவே, ஒவ்வொரு முறையும்- 3 இலக்க சிவிவி எண் மட்டும் வைத்து கட்டணத்தை செலுத்திவிடலாம்.

தற்போது வாடிக்கையாளர்களின் கடன், ஆதாய அட்டை விவரங்களை சேமித்து வைக்க இந்தியக்கட்டுப்பாட்டு வங்கி தடை விதித்துள்ளது. இதன்படி, ஏற்கெனவே சேமித்து வைக்கப்பட்டிருக்கும் அட்டை எண் உள்ளிட்ட விவரங்களும் அழிக்கப்பட்டுவிடும்.

எனவே, இனி பொருளுக்கு கேட்பு அளித்து கட்டணம் செலுத்தும் ஒவ்வொரு முறையும் 18 இலக்க அட்டை எண்ணை முழுமையாக பதிவு செய்ய வேண்டும். 

இயங்கலை மோசடிகளை தடுக்கும் நோக்கில் அட்டை விவரங்களைச் சேமித்து வைக்க இந்தியக்கட்டுப்பாட்டு  வங்கி இந்தவகைத் தடையை முன்னெடுத்துள்ள நிலையில்- இந்தச் சிறு கடுமையை கடமையாக ஏற்றுக் கொள்ள வேண்டியுள்ளது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,104.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.