கொல்கத்தா மாநகராட்சி தேர்தலில் பெரும்பான்மை இடங்களை பிடித்தது திரிணாமுல் காங்கிரஸ் 06,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: கொல்கத்தா மாநகராட்சித் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் பெரும்பான்மை இடங்களை பிடித்துள்ள நிலையில்- நாம் பெற்றுள்ள வெற்றி மக்கள் நம் பக்கம் இருப்பதை மீண்டும் நிரூபித்து இருக்கிறது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். கொல்கத்தா மாநகராட்சித் தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையான இடங்களை பிடித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மொத்தம் உள்ள 144 இடங்களில், 54 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மற்றும் 78 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. பாஜக, காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் ஓரு சில இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளன.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,104.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.