Show all

பேரறிவாளன் முழுமையாக விடுதலை!

பேரறிவாளன் முழுமையாக விடுதலை தீர்ப்பு, பேரறிவாளனுக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டிற்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியாக கொண்டாடப்படுகிறது.

04,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5124: தன்னை விடுதலை செய்யக் கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில், உச்சஅறங்கூற்றுமன்றம் பேரறிவாளன் முழுமையாக விடுதலை என்கிற வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்தத் தீர்ப்;பில் ஒன்றிய அரசின் நெடுங்கால தில்லாலங்கடிகளும், அதற்கு ஆதரவாக செயல் பட்ட ஒன்றிய அரசு நியமித்த ஆளுநரின் முன்னெடுப்பும் முறியடிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு தனக்கான அரசியல் உரிமையை நிலைநாட்டும் வகைக்கு உச்ச அறங்கூற்று மன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 

இந்தத் தீர்ப்பு பேரறிவாளனுக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டிற்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியாக கொண்டாடப்படுகிறது.
தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,252. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.