Show all

குன்னூர் உலங்கி விபத்துக்கு உறுதிபடுத்தப்பட்டுள்ள காரணம்! மோசமான வானிலையை கணிக்க தவறிய விமானிகளின் கவனக்குறைவே

குன்னூரில் நிகழ்ந்த, இந்தியச்சேனை உலங்கி விபத்து குறித்து சிலர் பொய்யான வதந்திகளை பரப்பியிருந்த வேளையில், அப்போதே தெரிவிக்கப்பட்ட, மோசமான வானிலையை கணிக்க தவறிய விமானிகளின் கவனக்குறைவே என்கிற காரணம்- தீவிர விசாரணைக்குப் பிறகு ஆம் என்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

18,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: சேனைக் கல்லூரியில் நடக்க இருந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக முப்படை முதன்மைத் தலைவர் விபின் ராவத் உள்பட 14 பேர் பயணம் செய்த சேனை உலங்கி கடந்த 22,கார்த்திகை (டிசம்பர் 8) குன்னூரில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். 

குன்னூர் சேனை உலங்கி விபத்தில் மூப்படை முதன்மைத் தலைவர் பிபின் ராவத் உள்ளிட்ட 14 பேர் உயிரிழப்புக்கு மோசமான வானிலையே காரணம் என்று தொடர்ந்து தெரிவிக்கப்பட்டு வந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் உள்ள சேனைக் கல்லூரியில் நடக்க இருந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக முப்படை முதன்மைத் தலைவர் விபின் ராவத் உள்பட 14 பேர் பயணம் செய்த சேனை உலங்கி குன்னூரில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். 80 விழுக்காட்டுத் தீக்காயங்களுடன் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த விமானப்படை தலைவர் வருண் சிங் மீட்டு வெலிங்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

இதனையடுத்து, எப்படியாவது அவரது உயிரை காப்பாற்ற வேண்டும் என்பதால் மேல் சிகிச்சைக்காக பெங்களூரு மருத்துவமனைக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். 

இந்த  விபத்து குறித்து விசாரித்து அறிக்கை பதிகை செய்ய விமானப்படை தளபதி மானவேந்திரா சிங் தலைமையிலான முப்படை அதிகாரிகளை கொண்ட குழு அமைக்கப்பட்டது.

இந்தக்குழு விபத்து நிகழ்வு இடத்துக்கு சென்று ஆய்வு செய்தது. விமானியின் குரல் பதிவுகள் அடங்கிய கருப்புப் பெட்டியை நிகழ்வு இடத்தில் இருந்து கைப்பற்றியது. 

உலங்கி விபத்து தொடர்பாக விசாரணை நடத்திய 3 பேர் கொண்ட முப்படையின் விசாரணை முடிவடைந்துள்ளது. அதில், மோசமான வானிலையை கணிக்க தவறிய விமானிகளின் கவனக்குறைவால் இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று ஆய்வறிக்கை இறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,116.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.