Show all

காஷ்மீரில் தொடரும் படுகொலைகள்!

நேற்றும் காஷ்மீரில் வெளிமாநிலங்களைச் சேர்ந்த இருவரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இது காஷ்மீரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

31,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123: காஷ்மீரில் அண்மைக் காலமாக பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இதை தடுப்பதற்காக பாதுகாப்பு படையினரும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். 

எனினும் பயங்கரவாதிகளின் இந்தப் படுகொலை நடவடிக்கை தொடர்ந்து வருகிறது. அந்தவகையில் நேற்றும் அங்கு வெளிமாநிலங்களைச் சேர்ந்த இருவரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர்.

அந்தவகையில், பீகாரை சேர்ந்த. ஸ்ரீநகரின் இட்கா பகுதியில் தெருவோரத்தில் பானிபூரி விற்பனை செய்து வந்த முப்பது அகவை அரவிந்த் குமாரை நேற்று அங்கு வந்த பயங்கரவாதிகள், சரமாரியாக சுட்டுவிட்டு தப்பி ஓடினர். இதில் படுகாயமடைந்த அரவிந்த் குமார், அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதைப்போல புல்வாமா மாவட்டத்தில் தச்சுத்தொழில் செய்து வந்த உத்தரபிரதேசத்தை சேர்ந்த சாகிர் அகமது என்பவர் மீதும் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இது காஷ்மீரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த படுகொலைகளுக்கு உமர் அப்துல்லா உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,039.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.