Show all

அதிகரித்துக்கொண்டே போகிறது! தொடர்வண்டியில் அனுமதிச்சீட்டு எடுக்காமல் தில்லாலங்கடிப் பயணம் மேற்கொள்வோர் எண்ணிக்கை

தொடர்வண்டியில் அனுமதிச்சீட்டு இல்லாமல் பயணிக்கும் தில்லாலங்கடி இந்திய மக்களிடையே பெருகி வருகிறது. இது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் மத்திய பிரதேசத்தை சேர்ந்த சந்திர சேகர் கவுர் என்பவர் கேள்வி எழுப்பி விடை பெற்றுள்ளார்.

09,மாசி,தமிழ்த்தொடராண்டு-5123: தொடர்வண்டியில் அனுமதிச்சீட்டு எடுக்காமல் தில்லாலங்கடிப் பயணம் மேற்கொள்வோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. இந்த வகையில் கடந்த 9 மாதங்களில் அதிகாரிகளிடம் சிக்கியவர்கள் மட்டுமே 1.75 கோடி பேர்களாம்.

தொடர்வண்டியில் அனுமதிச்சீட்டு இல்லாமல் பயணிக்கும் தில்லாலங்கடி இந்திய மக்களிடையே பெருகி வருகிறது. இது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் மத்திய பிரதேசத்தை சேர்ந்த சந்திர சேகர் கவுர் என்பவர் கேள்வி எழுப்பி விடை பெற்றுள்ளார்.

அந்த விடையில், தொடர்வண்டித் துறை தெரிவித்துள்ள தகவல்கள் வருமாறு:-

நடப்பு நிதி ஆண்டின் முதல் 9 மாதங்களில் தொடர் வண்டிகளில் அனுமதிச்சீட்டு இல்லாமல் பயணம் செய்து அதிகாரிகளிடம் சிக்கியவர்கள் எண்ணிக்கை மட்டுமே ஒரு கோடியே 78 லட்சம் ஆகும். இவர்கள் முன்பதிவு செய்யப்படாத மூட்டை முடிச்சுகளுடனும் பயணித்ததும் தெரிய வந்தது.

உரிய அனுமதிச்சீட்டு இன்றி பயணம் செய்த இவர்களிடம் ரூ.1,017 கோடியே 48 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

கொரோனா காலத்தில் பயணிகள் போக்குவரத்துக்கு கடுமையான கட்டுப்பாடுகள் போடப்பட்டிருந்தபோது இத்தகைய பயணிகளின் எண்ணிக்கை 27 லட்சம்.

கடந்த  நிதி ஆண்டில் 1 கோடியே 10 லட்சம் பேர் அனுமதிச்சீட்டு இன்றி தொடர் வண்டிகளில் பயணம் செய்து அகப்பட்டுக்கொண்டனர். இவர்களிடம் ரூ.561 கோடியே 73 லட்சம் அபராதமாக தண்டப்பட்டுள்ளது.

அதற்கும் முந்தைய நிதி ஆண்டில் 27 லட்சத்து 57 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதிச்சீட்டு இன்றி பயணம் செய்து மாட்டிக்கொண்டனர். இவர்களிடம் ரூ.143 கோடியே 82 லட்சம் அபராதம் தண்டப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,166.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.