Show all

இந்தியக் கட்டுப்பாட்டு வங்கியின் ஒரு நல்ல அறிவிப்பு! கிழிந்த ரூபாய் தாள்களை எந்த வங்கியிலும் மாற்றிக் கொள்ளலாம்

கிழிந்த ரூபாய் தாள்களை எந்த வங்கியிலும் மாற்றிக் கொள்ளலாம் என்கிற நல்லதொரு அறிவிப்பை இந்தியக் கட்டுப்பாட்டு வங்கி அறிவித்துள்ளது. 

26,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: கிழிந்த மற்றும் மாற்றவே முடியாத ரூபாய் தாள்களை கொடுத்து புதிய ரூபாய் தாள்களைப் பெற அந்தந்த மாநிலங்களின் தலைநகரங்களில் உள்ள கட்டுப்பாட்டு வங்கிக்கு செல்லவேண்டிய நிலைதாம் இதுவரை இருந்தது. இதனால் மாநிலங்களின் தலைநகரங்களில் உள்ள மக்கள் ரூபாய் தாள்களை மாற்ற வசதி இருந்தது. ஆனால், கிராம புற மக்கள் ரூபாய் தாள்களை மாற்ற முடியாத நிலையில் இருந்தனர்.

இதனால் நாடு முழுவதும் மாதந்தோறும் பல கோடி ரூபாய்க்கு மக்கள் உழைப்பு வீணாடிக்கப்பட்டு வருவது ஆய்வில் தெரியவந்துள்ளது. 

இந்நிலையில் ஒன்றிய மயமாக்கப்பட்ட வங்கிகள், அவற்றின் கிளை வங்கிகள், தனியார் வங்கிகள், கூட்டுறவு வங்கிகளில் பொதுமக்கள் கிழிந்த, மாற்றவே முடியாத ரூபாய் தாள்களை மாற்றிக்கொள்ளலாம் என ஆறு மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா உள்ளிட்ட காரணங்களால் வங்கிகள், கட்டுப்பாட்டு வங்கியின் வழிகாட்டுதலை பின்பற்ற முடியாமல் போனது.

இதனால் கிழிந்த ரூபாய் தாள்களை மாற்றுவதில் பொதுமக்கள் தொடர்ந்து அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலையில் கட்டுப்பாட்டு வங்கி வெளியிட்ட அறிக்கையில் இனிமேல் பொதுமக்கள் கிழிந்த ரூபாய் தாள்களை எந்த வங்கிகளிலும் மாற்றி கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து வங்கிகளுக்கும் அறிக்கை அனுப்பி வைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் பொதுமக்களுக்கு கிழிந்த ரூபாய் தாள்களை மாற்றி கொடுக்க உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும், போதுமான அளவு சில்லரை நாணயங்களை வழங்கவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால், தங்களின் உழைப்பின் ஆதாயமான பணம்- கிழிந்த காரணம் பற்றி செல்லாததாக்கப்படுவதற்கு முடிவு வந்துள்ளதில் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,065.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.