Show all

அதிகாரத்தின் ஆணவம் தோற்று இருக்கிறது! வேளாண் பெருமக்களின் வெற்றி வரலாற்றுக்கு காங்கிரஸ் வைத்துள்ள தலைப்பு

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உழவர்கள் நடத்தி வந்த போராட்டம் திரும்ப பெறப்பட்டு உள்ளது. இதை காங்கிரஸ் கட்சி வரவேற்று உள்ளது.

23,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: ஒன்றிய பாஜக அரசு அடாவடி வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றதையடுத்து வேளாண் பெருமக்களின் போராட்டமும் விலக்கிக் கொள்ளப்பட்டிருக்கிறது.

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உழவர்கள் நடத்தி வந்த போராட்டம் திரும்ப பெறப்பட்டு உள்ளது. இதை காங்கிரஸ் கட்சி வரவேற்று உள்ளது.

கடந்த ஓராண்டாக நடந்த இந்த போராட்டத்தின் முதன்மையான நிகழ்வுகள் குறித்த காணொளி ஒன்றை தனது கீச்சுத் தளத்தில் பகிர்ந்திருந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் இராகுல் காந்தி, இது உண்மையின் வெற்றி எனவும், போராட்டத்தில் உயிர் நீத்த உழவர்களின் ஈகம் எப்போதும் நினைவுகூரப்படும் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

இதைப்போல கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா, 'உழவர்களின் மன உறுதி வென்று இருக்கிறது, அதிகாரத்தின் ஆணவம் இன்று தோல்வி அடைந்து இருக்கிறது' என்று தெரிவித்து உள்ளார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,093.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.