Show all

ஆளும் பாஜகவிற்கு எரிச்சலூட்ட மட்டுமே! உலக கோப்பையில் பாகிஸ்தான் வெற்றியை காஷ்மீர் கொண்டாடியது: பரூக் அப்துல்லா

உலக கோப்பை துடுப்பாட்டத்தில் பாகிஸ்தான் வெற்றியை காஷ்மீர் கொண்டாடியது - வெறுமனே ஆளும் பாஜகவிற்கு எரிச்சலூட்ட மட்டுமே என்று விளக்கம் அளித்துள்ளார் பரூக் அப்துல்லா.

10,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: துபாய், இருபது ஓவர் உலக துடுப்பாட்டப் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. இது இந்தியத் துடுப்பாட்ட  ஆர்வலர்கள் நடுவில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் பாகிஸ்தான் வெற்றியை ஜம்மு காஷ்மீரில் சிலர் கொண்டாடி இருந்தனர்.

இதன் பின்னணி குறித்து காஷ்மீர் முன்னாள் முதல் அமைச்சர் பரூக் அப்துல்லா நேற்று கூறுகையில், 'பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடியவர்களுக்கு, உள்நோக்கம் எதுவும் இல்லை. அதை கொண்டாடியவர்கள் குழந்தைகள், இளைஞர்கள். 
எம் மக்களிடம் இருந்து அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 370 மற்றும் 35 ஏ-யை பாஜகவினர் எடுத்துக்கொண்டனர். இந்த நிலையில் பாஜகவுக்கு எரிச்சல் ஏற்படுத்தத்தான் இப்படி நடந்து கொண்டுள்ளனர்' என குறிப்பிட்டார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,049.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.