Show all

தோனி இல்லாத ஐ.பி.எல். கற்பனை செய்வது கடினம்: கவாஸ்கர்

ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அளித்த தீர்ப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு 2 ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டது. இதுகுறித்து கவாஸ்கரிடம் கேட்டபோது, தோனி இல்லாத ஐ.பி.எல்.-ஐ கற்பனை செய்து பார்ப்பதுகூட கடினம் என்றார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு காவஸ்கர் பேட்டியளித்தார். அப்போது, "தோனி இல்லாத ஐபிஎல் போட்டி' குறித்த கேள்விக்கு அவர் பதிலளித்ததாவது: ‘‘தோனி இல்லாத ஐ.பி.எல்.-ஐ கற்பனை செய்வது கூட மிகவும் கடினமாக இருக்கும். எனினும், அவருக்கு 34 வயதாகிறது. இன்னும் சில வருடங்களில் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகி விடுவார். எதுவாக இருந்தாலும், தோனி இல்லாத ஐ.பி.எல். போட்டியை நினைத்து பார்ப்பது மிகக்கடினம்’’ என்றார்.

மேலும், சென்னை, ராஜஸ்தான் வீரர்கள் கடும் அதிர்ச்சியில் இருப்பார்கள் என்பதை நான் அறிவேன். யாரோ செய்த தவறுக்கு அவர்கள் தனித்து விடப்பட்டிருக்கிறார்கள். அதேசமயம், மூன்று தலைசிறந்த நீதிபதிகள் கொடுத்த இந்த தீர்ப்பின் மீது நாம் கேள்வி எழுப்ப முடியாது’’ என்றார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.