தென்னிந்திய நடிகர் சங்கக் கடனை முழுமையாக அடைத்துவிட்டோம் என்று
நடிகர் விஷால் தெரிவித்தார். தென்னிந்திய நடிகர்சங்க பழைய நிர்வாகிகள், நடிகர் சங்கத்துக்குச் சொந்தமான நிலத்தை எஸ்பிஐ சினிமாஸிடம்
ஒப்படைத்து, அதன் மூலம் நடிகர் சங்க கடனை அடைக்கவும், வருவாய் ஈட்டவும் ஒப்பந்தம்
செய்யப்பட்டது. சமீபத்தில் நடிகர் சங்க புதிய நிர்வாகிகளாகப் பொறுப்பேற்ற நாசார்,
விஷால், கார்த்தி உள்ளிட்டோர் எஸ்.பி.ஐ.சினிமாஸுடன் பேசி, பல்வேறு நபர்களிடம் கடன்
பெற்று நடிகர் சங்க நிலத்தை மீட்டனர். கடன் தொகையைத் திருப்பி அளிக்கும் வகையிலும், நடிகர் சங்க கட்டடத்தை
கட்டுவதற்காகவும் நிதி திரட்டும் வகையில் கடந்த ஏப்ரல் 17ம் தேதி சென்னையில் நட்சத்திர
கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. நட்சத்திர கிரிக்கெட் மூலம் கிடைத்த வருவாயைக் கொண்டு கடனை திருப்பி
செலுத்திவிட்டதாகவும் ஐசரியிடம் கடனாக வாங்கிய
ரூ. 2 கோடி திரும்ப அளித்துவிட்டோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். என்று நடிகர் விஷால் கூறினார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.