Show all

வடபழனி கோவிலில் பிச்சை: செயலலிதா படத்தில் குழு நாட்டியக்காரராக இருந்த ஜமுனா

செயலலிதா படத்தில் குழு நாட்டியக்காரராக இருந்த ஜமுனா தற்போது வடபழனி கோவிலில் பிச்சை எடுத்து வருகிறார்.

     செயலலிதா முன்னணி நாயகியாக இருந்த காலத்தில் குழு நாட்டியக்காரராக இருந்தவர் ஜமுனா. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த மோட்டார் சுந்தரம் பிள்ளை, ஔவையார், சரஸ்வதி சபதம் உள்ளிட்ட படங்களில் குழு நாட்டியக்காரராக இருந்துள்ளார்.

தற்போது 80 அகவையுள்ள அவர் வடபழனி கோவிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார். ஜமுனாவின் கணவர் ஒப்பனையாளராக இருந்துள்ளார். சென்னையில் வசதியாக வாழ்ந்துள்ளனர். கணவர் இறந்த பிறகு குடும்பத்தாரால் கைவிடப்பட்ட ஜமுனா பிச்சை எடுத்து வருகிறார். அவருக்கு சிவக்குமார், கமல் ஹாஸன் முன்பு பண உதவி செய்துள்ளனர். மீண்டும் அவர்களிடம் சென்று உதவி கேட்க அவர் விரும்பவில்லை.

     இந்நிலையில் பலருக்கும் உதவி செய்து வரும் நடிகர் விஷால் தனக்கு உதவ மாட்டாரா என்று ஜமுனா எதிர்பார்க்கிறார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.