Show all

இரண்டு செய்திகள்! ஒன்று, ஆண் குழந்தை பெற்றெடுத்தார் ஆல்யா மானசா. இரண்டு, இனி சந்தியாவாக நடிக்க ஆல்யா வரமாட்டார்

ஆல்யாவுக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்ததாக சஞ்சீவ் சமூகவலைதளங்களில் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார். மேலும் இராஜாராணி தொடரில் சந்தியாவாக நடிக்க ஆல்யா வரமாட்டார் என்பதாகவும் செய்தி வெளியாகி உள்ளது.
 
13,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: விஜய் தொலைக்காட்சியில் கதைத் தலைவன். கதைத் தலைவியாக இருந்தவர்கள்- தலைவன் தலைவியாக குடும்ப வாழ்க்கையில் இணைந்தனர், ஆல்யா மானசாவும் சஞ்சீவியும்.

விஜய் தொலைகாட்சியில் ஓடிக் கொண்டிருந்தது இராஜாராணி தொடர். இதில் ஆல்யா மானசாவும் சஞ்சீவும் கதைத் தலைவனும் கதைத்தலைவியுமாக நடித்திருந்தனர். வீட்டில் பணிப்பெண்ணான ஆல்யாவை முதலாளியின் மகன் சஞ்சீவ் திருமணம் செய்து கொள்வது, அந்தப் பெண்ணை அந்த குடும்பத்தினர் மருமகளாக பார்க்காமல் வேலை செய்யும் பெண்ணாகவே பார்ப்பதுஎன, கதை வடஇந்திய கலாச்சாரத்தில் தள்ளாடி ஒருவழியாக முடிந்தது.

இதன் அடுத்த பகுதியாக இராஜா ராணி 2 என்ற தொடர் தொடங்கப்பட்டது. இதில் ஆல்யா மானசா நடித்திருந்தார். சஞ்சீவுக்கு பதில் சித்து நடித்திருந்தார். இந்தத் தொடரில் காவல்துறை அதிகாரியாகத் துடிக்கும் சந்தியா எனும் வேடத்தில் ஆல்யா நடித்திருந்தார். ஆனால் பெண் என்றால் வீட்டு வேலை செய்ய வேண்டும், மாமனார் மாமியாரை கவனித்துக் கொள்ள வேண்டும். கணவரை அன்போடு கவனித்து கொள்ள வேண்டும். இதுதான் மனைவியின் வேலை என நினைக்கும் மாமியார். அதே வடஇந்தியக் கலாச்சாரக் கதைக்களம். 

மாமியாருக்கு பிடித்த மருமகளாக சந்தியா இருப்பாரா இல்லை சந்தியாவின் கனவை நனவாக்கும் கணவராக சரவணன் இருப்பாரா என்பதுதான் மீதி கதை. இந்தத் தொடரில் நடித்துக் கொண்டிருந்த போதே ஆல்யா மீண்டும் கருவுற்று இருந்தார்.

இதனால் தொடரில் இருந்து அவர் விலகினார். அவருக்கு மாற்றாக தற்போது ரியா அந்த தொடரில் நடித்து வருகிறார். இந்த நிலையில் ஆல்யாவுக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்ததாக சஞ்சீவ் சமூகவலைதளங்களில் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார். அந்த குழந்தைக்கு ஆரிஷ் என பெயரும் சூட்டியுள்ளார்கள். 

இந்த நிலையில் குழந்தை பிறந்தவுடன் சில நாட்கள் கழித்து இராஜா ராணி 2 தொடருக்கு ஆல்யா வருவார் என கொண்டாடிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் அவரோ இனி என்னால் முடியவே முடியாது. சந்தியாவாக நடிக்க வரவே மாட்டேன் என தௌ;ளத் தெளிவாக கூறிவிட்டாராம். இதனால் இனி சந்தியா வேடத்தில் ரியாவே தொடருவார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,200. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.