Show all

திரைப்பட உதவி இயக்குநர்களுக்கு இடையிலான கைகலப்பு கொலையில் முடிந்தது.

10,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சென்னை வளசரவாக்கம் கைகங்ககுப்பம் வஉசி தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் அகில் கண்ணன். திரைப்பட உதவி இயக்குநராக பணியாற்றி வந்தார். இவருடன், கார்த்திக் உட்பட மேலும் 6 உதவி இயக்குநர்களும் அந்த குடியிருப்பில் தங்கியிருந்தனர். திரைப்படங்களில் சிறிய அளவிலான பங்களிப்புகளை இவர்கள் கொடுத்து வந்தனர்.

இந்த நிலையில், தொலைகாட்சியில் எந்தச் சேனல் பார்ப்பது என்ற தகராறில் அகில் கண்ணனை, கார்த்திக் அடித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து காவல்துறையினர் கார்த்திக்கை கைது செய்துள்ளனர். மற்ற 6 உதவி இயக்குநர்களிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. அகில் கண்ணன் திண்டுக்கல்லைச் சேர்ந்தவர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.