Show all

பரபரப்பான பேசுபொருளாகியுள்ளது! புன்னகை அரசி சினேகாவின் புகார்

புன்னகை அரசி சினேகாவின் புகார் குறித்து காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கி விட்டதாக அறிய முடிகின்றது. இந்தச் செய்தி இன்றைய பரபரப்பான பேசுபொருளாகியுள்ளது.

02,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: தனியார் ஏற்றுமதி நிறுவனம் பண மோசடி செய்ததாக கானாத்தூர் காவல் நிலையத்தில் தமிழ்த் திரையுலகின் பேரறிமுக நடிகையான சினேகா புகார் அளித்துள்ளார்.

அந்தப் புகாரில், தங்கள் நிறுவனத்துக்கு பெரும் தொகையை பங்காக கொடுத்தால் மாதம் குறிப்பிட்ட விழுக்காடு லாபம் தருவதாக ஆசைக்காட்டியதன் பேரில் இயங்கலை மூலம் ரூ.25 லட்சமும், நேரில் ரூ.1 லட்சமும் கொடுத்ததாகவும் இதற்காக மாதம் ரூ.1.80 லட்சம் லாபம் தருவதாக அவர்கள் தெரிவித்ததாகவும், ஆனால் ஐந்து மாதம் ஆகியும் பங்கு தொகையும் தராமல், அசல் தொகையும் தராமல் இருப்பதாகவும் இதுகுறித்து கேட்டபோது பணம் தர முடியாது என அவர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.

இந்தப் புகார் குறித்து காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கி விட்டதாக அறிய முடிகின்றது. இந்தச் செய்தி இன்றைய பரபரப்பான பேசுபொருளாகியுள்ளது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,071.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.