Show all

சூர்யா வெளியிட்ட காற்றின் மொழி முதல்பார்வை சுவரொட்டி! அதில் ஜோதிகா ஆற்றுப்படுத்தும் பெண்களுக்கான பத்து கட்டளைகள்

30,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஜோதிகா நடிப்பில் இயக்குநர் ராதாமோகன் இயக்கத்தில் உருவாகி வரும் 'காற்றின் மொழி' படத்தின் முதல் பார்வைக்கான சுவரொட்டி வெளியாகியுள்ளது. இதனை நடிகர் சூர்யா இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

திருமணத்திற்கு பிறகு வெகு நாட்கள் திரைப்படத்தில் நடிக்காமல் இருந்த ஜோதிகா '36 வயதினிலே' படத்தின் மூலம் பெரிம் வெற்றி ஈட்டினார். அதற்கு அடுத்து இவர் நடித்த 'மகளிர் மட்டும்' படமும் பெரிய அளவிலான வெற்றியை தழுவியது. தற்போது 'செக்க சிவந்த வானம்' மற்றும் 'காற்றின் மொழி' ஆகிய படங்களில்  நடித்து வருகிறார்.

திருமணத்திற்கு பிறகு அவர் நடித்த அனைத்து படங்களுமே பெண்களை முதன்மைப் படுத்தும் கதைக் களத்;தைக் கொண்டதாகும். அந்த வகையில் தற்போது இவர் நடித்து வரும்

'காற்றின் மொழி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியுள்ளது. இதனை நடிகர் மற்றும் ஜோதிகா கணவரான சூர்யா வெளியிட்டார்.

விடுதலை நாளை முன்னிட்டு இன்று வெளியாகியுள்ள இந்த சுவரொட்டியில் ஜோதிகா இரண்டு கல்வெட்டுகளை தாங்கி நிற்கிறார். அதில் பெண்களுக்கான 10 கட்டளைகள் எழுதப்பட்டுள்ளன.

1. உன் விருப்பம்போல் உடை உடுத்துவாயாக

2. பசித்தால் நீயே முதலில் சாப்பிடுவாயாக

3. உன் கணவன் உன்னை ஒரு கன்னத்தில் அறைந்தால்,     மறுகன்னத்தை காட்டாதிருப்பாயாக

4. நீ விரும்பியபடி செய்வாயாக

5. குண்டாய் இருக்க விரும்பினால் குண்டாய் இருப்பாயாக

6. வீட்டுப் பணிகளில் உன்  கணவனையும் பங்கெடுக்கச் செய்வாயாக

7. நீ சம்பாதித்து உன் விருப்பம்போல் செலவு செய்வாயாக

8. நீ விரும்பாத போது, வற்புறுத்தலுக்குச் சம்மதியாமல் இருப்பாயாக

9. மனதில் பட்டதைச் சொல்வாயாக

10. ஆணும் பெண்ணும் சரிசமம் என்பதை அறிவாயாக.

என்பவைகள்தாம்  அந்தப் பத்துக் கட்டளைகள்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,880.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.