Show all

கசிந்த தகவல் அடிப்படையில் சர்கார் கதை: கெத்தா? சப்பையா? விவாதம் தீபாவளி வரை தொடரும்

13,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் சர்கார் திரைப்படம் வரும் தீபாவளி அன்று பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. படத்தின் அனைத்து காட்சிகளும் நிறைவடைந்த நிலையில் படத்தின் இதர வேலைகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் சர்கார். இதில் கீர்த்தி சுரேஷ் இரண்டாவது முறையாக விஜய்க்கு கதைத்தலைவியாக இணைந்துள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், பழ.கருப்பையா, யோகிபாபு ஆகியோர் முதன்மை வேடங்களில் நடிக்கின்றனர்.  

இந்நிலையில் படத்தின் கதை குறித்து கசிந்துள்ள தகவல்:  உலக அளவில் பெரிய தொழிலதிபராக விஜய் நடிக்கிறார். அமெரிக்காவிலிருந்து இந்தியா வருகிறார் விஜய். அப்போது வாக்களர் பட்டியலில் அவரது பெயர் இடம்பெறாததைக் கண்டு கோபமடையும் விஜய் இதுகுறித்து விசாரிக்கும் போது எல்லோரும் அலட்சியம் காட்டுகின்றனர். 

பின்பு விஜய்யே களத்தில் இறங்கி இதற்கென வேலைப்பார்ப்பது தான் சர்கார் திரைப்படம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,894.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.