Show all

தலைப்பை வென்றார் ரித்விகா! பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாம்பருவ விருது மற்றும் ரூபாய் ஐம்பது இலட்சம் காசோலையுடன்

15,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கடந்த ஆண்டு விஜய்  தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'பிக்பாஸ்' நிகழ்ச்சி தமிழக பார்வையாளர்கள் நடுவே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில், இந்நிகழ்ச்சியின் இரண்டாவது பருவம் கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கியது. இதில், 16 பிரபலங்கள் பங்கேற்றனர். மேலும், நடிகை விஜயலட்சுமி இடைச்செருகலாக நுழைந்தார். 

இந்த 17 போட்டியாளர்களில், கடந்த கிழமை வரை 13 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டனர். இதன்பின், ஜனனி, ரித்விகா, ஐஸ்வர்யா தத்தா, விஜயலட்சுமி ஆகிய நான்கு பேர் மட்டும் பிக்பாஸ் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினர். இதில் நடிகை ஜனனி, சனியன்று ஒளிபரப்பான காட்சியில், பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, ஐஸ்வர்யா, ரித்விகா, விஜயலட்சுமி உள்ளிட்டோர் வீட்டிலிருந்தனர். இவர்கள் மூவரில் யார் பிக்பாஸ் தலைப்பை வெல்வார்கள் என பார்வையாளர்கள் நடுவே மிகுந்த எதிர்பார்ப்பும் அதையொட்டிய பரபரப்பும் இருந்தது. 

இதையடுத்து, ஞாயிறன்று ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி காட்சியில், இரவு பனிரெண்டு வரை அடுக்கடுக்கான விளம்பரங்கள், கலைநிகழ்ச்சிகளுக்க நடுவே நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் தலைப்பு வெற்றியாளரை அறிவித்தார். அதன்படி, நடிகை விஜயலட்சுமி 3ஆம் இடத்தையும், நடிகை ஐஸ்வர்யா 2 ஆம் இடத்தையும். மக்களிடம் பெரிதளவில் ஆதரவு பெற்ற நடிகை ரித்விகா இந்தப் பருவ பிக்பாஸ் தலைப்பு வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,927.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.