Show all

ஐசுவர்யாவை வெளியேற்றி, யாசிகாவைப் பலவீனமடையச் செய்வது மக்கள் விருப்பம்! பிக்பாஸ் விருப்பம் என்னவாக இருக்கப் போகிறதோ

19,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120:  ஒவ்வொரு திங்கட் கிழமையும் பிக்பாஸ் வீட்டில், வெளியேற்றர் படலம் நடந்து வரும் நிலையில் இந்தக் திங்கட்கிழமை கொஞ்சம் வித்தியாசமாக நடந்தது. வெளியேற்றரை தெரிவிக்க விரும்புபவர் மூன்று பேர்களை அழைத்து எதற்காக வெளியேற்றம் செய்கிறோம் என்பதை சொல்ல வேண்டும். அந்தக் குற்றச்சாட்டை வெளியேற்றர் மறுத்து தன்மீதுள்ள தவறான புரிதலைத் திருத்த முயற்சிக்கலாம். அந்த வகையில் இந்த கிழமை ஐசுவர்யா, மும்தாஜ், ஜனனி, செண்ட்ராயன், விஜயலட்சுமி ஆகிய ஐவர் வெளியேற்றர் பட்டியலில் உள்ளனர். தலைவர் என்பதால் யாஷிகா வெளியேற்றர் பட்டியலில் இல்லை. அதேபோல் பாலாஜி, ரித்விகா இந்தக் கிழமை வெளியேற்றத்திலிருந்து தப்பித்தனர்.

ஐசுவர்யா நீண்ட இடைவெளிக்கு பின் வெளியேற்றர் பட்டியலில் சிக்கியுள்ளதால் பொதுமக்கள் தங்கள் வாக்குகள் மூலம் அவரை வச்சு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐசுவர்யாவை வெளியேற்றிவிட்டால் யாசிகா பலவீனமடைந்துவிடுவார் என்றே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. பிக்பாஸ் விருப்பம் என்னவாக இருக்கப் போகிறதோ!

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,900.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.