Show all

பாகிஸ்தான் நடிகை மீரா 7ஆண்டுகள் போராட்டத்தில் தனக்கு திருமணம் ஆகாததை நிரூபித்துள்ளார்

09,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: பாகிஸ்தான் திரையுலகில் புகழ்பெற்ற நடிகை மீரா அகவை40. சில இந்தியப் படங்களிலும் நடித்துள்ளார். தமிழ்தொடர்ஆண்டு-5119ல் (2009) பைசலாபாத்தை சேர்ந்த தொழிலதிபர் ஆதிக் உர் ரெஹ்மான், தனக்கும் மீராவுக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றதாகவும் தன்னை மீரா கணவர் என வெளிப்படையாக சொல்லாதது வருத்தமளிப்பதாகவும் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்.

மேலும் மீரா தனது மனைவி என்பதை நிரூபிக்க அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். தன்னை விவாகரத்து செய்யாமல் மீரா வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்ளக்கூடாது. மீரா வாழும் வீடு தனக்கு வேண்டும். வெளிநாடுகள் செல்ல மீராவுக்கு தடை விதிக்க வேண்டும் என பல கோரிக்கைகளை முன்வைத்து ரெஹ்மான் வழக்கு தொடர்ந்தார்.

ரெஹ்மானின் குற்றச்சாட்டுகளை மறுத்த மீரா, தனக்குத் திருமணம் ஆகவில்லை என்றும் திருமண சான்றிதழை எதிர்த்து எதிர்மனு பதிகை செய்தார்.

இதனையடுத்து இறுதியாக தனக்கு நியாயம் கிடைத்து உள்ளது என மீரா தெரிவித்துள்ளார். 7 ஆண்டுகளாக போராடிய மீராவுக்கு தற்போது நீதி கிடைத்துள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,617

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.