Show all

கொண்டாடிகளின் ஆர்வத்தேடல்! பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நமீதா மாரிமுத்து வெளியேறியது ஏன்?

நேற்று திடீர் என பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான நமீதா மாரிமுத்து, தவிர்க்க முடியாத காரணத்தால் வெளியேறியுள்ளதாக நிகழ்ச்சி தொடங்கும் முன் தெரிவிக்கப்பட்டது. ஏன்? ஏன்? காரணம் தேடி அலைபாய்கின்றனர் கொண்டாடிகள்.

24,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123: போட்டியாளர்களின் முகங்களை பொது வெளியில் பிய்த்துத் தொங்கவிடுகிற நிகழ்ச்சிதானே பிக்பாஸ் நிகழ்ச்சி. அப்புறம் என்ன? நமீதா மாரிமுத்து வெளியேறியதன் காரணம் தெரிவிக்காத பசப்பல், என்று பிக்பாஸ் கொண்டாடிகள் புலம்பிக் கொண்டுள்ளனர்.

கமல் தொகுத்து வழங்கும் விஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ் நிகழ்ச்சி, மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டு விளையாடி வரும் நிலையில், திடீர் என்று நேற்று நமீதா வெளியேற்றப் பட்டதாக கூறப்பட்டது. ஆனால் ஏன் வெளியேறினார் என்பது குறித்த தகவல் தற்போது வரை அதிகாரப்பாடாக வெளியாகவில்லை.

நேற்று தாமரை செல்வியின் பேச்சுக்கு நமீதா கடுப்பாகி, தாமரை செல்வி கண்கலங்கும் அளவிற்கு நமீதாவும் கடுப்பேற்றினார். பின்னர் இந்த சிக்கல் முடிவுக்கு வந்து விட்டது. வரும் கிழமைகளில் பரபரப்பான சண்டைகள் உருவாகும் என எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் பிக்பாஸ் கொண்டாடிகள்.

இந்நிலையில் நேற்று திடீர் என பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான நமீதா மாரிமுத்து, தவிர்க்க முடியாத காரணத்தால் வெளியேறியுள்ளதாக நிகழ்ச்சி தொடங்கும் முன் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து தற்போது வெளியாகியுள்ள யூகிப்பில், நமீதா மாரிமுத்து திடீர் என கோவத்தில் சில பொருட்களை சேதப்படுத்தியது மட்டும் இன்றி, மயங்கி கீழே விழுந்துள்ளார் என்பதாகவும், அவரது மனநிலை, மற்றும் உடல்நிலையை கருத்தில் கொண்டு தற்போது அவரை பிக்பாஸ் நிகழ்ச்சியாளர்கள் வெளியேற்றியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து எந்த ஒரு அதிகாரப்பாடான அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,032.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.