Show all

சீன நடிகருக்கு இணையாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்

15,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இயக்குநர் பிரியதர்சனின் கனவுப்படம் 'மரக்கார் அரபிக் கடலிண்டே சிம்ஹம்'. நான்கு நூற்றாணடுகளுக்கு முன்பு கேரளாவில் வாழ்ந்த கடற்படைத் தலைவனான குஞ்சலி மரக்கார் என்பவரின் வாழ்க்கை வரலாறுதான் இந்தப் படம்.

வெள்ளைக்காரர்களைத் தீவிரமாக எதிர்த்தவர் இவர். குஞ்சலி மரக்கார் வேடத்தில், மோகன்லால் நடிக்கிறார். அவருடைய இளம் வயது கதாபாத்திரத்தில், மோகன்லாலின் மகன் பிரணவ் மோகன்லால் நடிக்கிறார். முதன்மைக் கதாபாத்திரத்தில் பிரபு நடிக்கிறார்.

'சிறைச்சாலை' படத்துக்குப் பிறகு 22 ஆண்டுகள் கழித்து மோகன்லால் பிரபு இருவரும் இந்தப் படத்தின் மூலம் இணைந்து நடிக்கின்றனர். இந்தப் படத்தில், முதன்மைக் கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

சண்டக் கோழி2, சர்கார் ஆகிய படங்களில் சுறுசுறுப்பாக இயங்கி வரும், கீர்த்தி சுரேஷ், மலையாளத்தில் தன்னை அறிமுகப் படுத்தியவர் பிரியதர்ஷன் என்பதால், அவர் கேட்டதும் மறுக்காமல் ஒப்புக் கொண்டுள்ளார். இந்தப் படத்தில் அவர் மோகன்லாலுக்கு ஜோடியாக நடிக்கிறார் என செய்தி வந்தது. ஆனால் அவர் சீன நடிகர் ஒருவருக்கு இணையாக நடிப்பதாக தற்போது கூறப்படுகிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,927.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.