Show all

இமைக்கா நொடிகள் தடை தாண்டி வெளியீடு; வசூல் கொழிப்பு! நயன்தாரா பெருந்தன்மை

17,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நயன்தாரா, அதர்வா நடிப்பில் முந்தாநாள் திரைக்கு வந்த படம் இமைக்கா நொடிகள். இப்படம் வியாழக்கிழமையே வருவதாக இருந்து பிறகு வெள்ளிக் கிழமை திரைக்கு வந்தது. இந்த படம் பல தடைகளை தாண்டி திரைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இப்படம் உலகம் முழுவதும் நேற்று ரூ 5 கோடி வரை வசூல் செய்திருக்கும் என திரைவசூல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதில் தமிழகத்தில் மட்டுமே இப்படம் ரூ3 கோடி வரை வசூல் வந்துள்ளதாக கூறப்படுகின்றது.

நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படம் ரூ 25 கோடிகளுக்கு மேல் வசூல் செய்ய, அடுத்து இமைக்கா நொடிகளும் வசூல் வேட்டையை தொடங்கியுள்ளது.

இமைக்கா நொடிகள் படத்தின் தயாரிப்பாளர் நயன்தாராவிற்கு ரூ 75 லட்சம் வரை சம்பள பாக்கி வைத்திருந்தாராம். இதனால் கடைசி நேரத்தில் படம் வெளியீட்டுக்கு சிரமம் ஏற்பட்டது. அந்த நேரத்தில் நயன்தாரா அந்த பணத்தை விட்டு விடுங்கள், இனி கேட்க வேண்டாம் என்று கூறிவிட்டாராம். அதனாலேயே படத்தை வெளியிட முடிந்ததாம்.

இப்போ வசூல் கொழிக்கும் நிலையில் நயன்தாரா பாக்கியைக் கொடுத்து நன்றியை வெளிப்படுத்துவாரா தயாரிப்பாளர். இதெல்லாம் நமக்கெதற்கு? படத்தைப் பார்த்தோமா மகிழ்ந்தோமா என்று விட்டு விட்டுப் போவோமா என்கிறீர்களா!

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,898.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.