Show all

ஐசுவர்யா பாதுகாக்கப் பட்டார்! ஓட்டுப் போடாத மக்களுக்கு குட்டு வைத்து, தனது அரசியல்நோக்கத்தை அறுவடை செய்தார் கமல்

24,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120:  பிக்பாஸ் நிகழ்ச்சியை சனிக்கிழமையன்று விறுவிறுப்பாக கொண்டு சென்றார் கமல்ஹாசன். அந்த விறுவிறுப்புக்கு பலிகடா ஐசுவர்யா.

பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்கும் மக்களுக்கு ஐசுவர்யாவின்  அடாவடிகள் அவ்வளவாக பிடிக்கவில்லை என்று அறிந்ததும் தானும் அவர்களோடு சேர்ந்தால்தான் தனக்கு கைதட்டல் கிடைக்கும் என்று முடிவு செய்த கமல்ஹாசன், இன்றைய நிகழ்ச்சியில் ஐசுவர்யாவின் அடுக்கடுக்கான பொய்களை ஒவ்வொன்றாக வெளியே கொண்டு வந்தார். 

மேலும் ஐஸ்வர்யாவுக்கு ஆதரவாக இருந்த மும்தாஜ் மற்றும் யாசிகாவையும் அவர் கேள்வி மேல் கேட்டு திணறடித்தார். கமல்ஹாசனின் அதிரடி தாக்குதலை சமாளிக்க முடியாமல் ஐசுவர்யா ஒரு கட்டத்தில் கதறி அழத்தொடங்கினார். மொத்தத்தில் ஐசுவர்யாவுக்கு பிடிக்காதவர்கள் அனைவருக்கும் இன்றைய நிகழ்ச்சி ஒரு கொண்டாட்டமாக இருந்தது. 

ஆனாலும் பிக்பாஸ், ஐஸ்வர்யாவை மீண்டும் ஒருமுறை காப்பாற்றி தன் நோக்கத்திற்கு, நிகழ்ச்சியின் போக்கை அமைத்துக் கொண்டார். கமலும் அதை, ஓட்டுப் போடாத மக்களுக்கு குட்டு வைத்து, தனது அரசியல்நோக்கத்தை அறுவடை செய்தார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,905.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.