Show all

கண்டபடி கருத்து கூறி ரஜினி, காலாவை காற்று வாங்க வைத்தார் என்று பாடும் காலா படக்குழுவினர்

26,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நான் காற்று வாங்கப் போனேன் 

ஒரு கவிதை வாங்கி வந்தேன்

அதைக் கேட்டு வாங்கிப் போனாள் 

அந்தக் கன்னி என்ன ஆனாள்

நடை பழகும்போது தென்றல் விடை சொல்லிக்கொண்டு போகும் 

அந்த அழகு ஒன்று போழும் நெஞ்சை அள்ளிக் கொண்டு போகும்

அதைக் கேட்டு வாங்கிப் போனாள் அந்தக் கன்னி என்ன ஆனாள் என்று எம்ஜியார் சரோஜா தேவியை எண்ணி பாடுவதைப் போல காலா வெற்றி குறித்து, படக்குழுவினரை-

கண்டபடி கருத்து கூறி ரஜினி, 

காலாவை காற்று வாங்க வைத்தார் 

என்று பாடும் நிலைக்குத் தள்ளி விட்டார் ரஜினி.

ஆன்மிக அரசியலை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் சமூக விரோதிகள் புகுந்துவிட்டதுதான் பிரச்சனை, காவல்துறையினரைத் தாக்கியதும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீ வைத்ததும் அவர்கள் தான் எனக்கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், போராட்டம் போராட்டம் என தொடர்ந்தால் தமிழ்நாடு சுடுகாடாகிவிடும் என அவர் கூறியது கடும் எதிர்ப்புக்கு உள்ளானது. 

இதனால், அவர் நடித்து வெளியாகவுள்ள காலா படத்தை பார்க்க மாட்டோம் என பலரும் சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், காலா படம் நேற்று வெளியனது. ஏற்கனவே முன்பதிவு மந்தமாக இருந்த நிலையில் பல மாவட்டங்களில் திரையரங்குகள் காலியாக இருக்கிறதாம்.   

வழக்கமாக ரஜினி படம் வெளியாகிறது எனில், முன்பதிவு தொடங்கியவுடனேயே ஒரு வாரத்திற்கு அனுமதிச்சீட்டுடுகள் முன்பதிவு செய்யப்பட்டு விடும். ஆனால், சென்னையில் சத்யம் உள்ளிட்ட முக்கிய திரையரங்குகளிலேயே வார இறுதிநாட்களான சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் அனுமதிச்சீட்டு இன்னும் பதிவு ஆகாமல் காலியாக கிடக்கிறது. மிக சொற்பமான அனுமதிச்சீட்டுகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டிருக்கிறதாம்.

குறிப்பாக, திண்டுக்கல், மதுரை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கணினிமய முன்பதிவு மிகவும் மந்தமாக இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல், ஈரோடு, கோவை, திருச்சி, சேலம் ஆகிய மாவட்டங்களில் திரையரங்கு நிறைய வில்லையாம். 

இது படக்குழுவினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,813. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.