மறுபிறப்பு உண்மையா? மறுபிறப்பு என்றால் என்ன? கடந்த பிறவியில் நாம் என்னவாகப் பிறந்தோம்? என்று வேறொரு களத்தில் கேட்கப்பட்டிருந்த வினாவிற்கு- மறுபிறப்பு உண்மைதான்- அதுதான் உலகத்தின் வளர்ச்சி. மறுபிறப்பு என்பது ஒன்றித்தலில் உருவாகும் புத்தியல். கடந்த பிறவியில் அம்மா அப்பா என்று இரண்டாக இருந்தோம். என்று விடையளிப்பதற்கு உருவாக்கப்பட்ட கட்டுரை இதுவாகும்.

11,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5125.

இந்தியாவில் இன்றுவரை பேரளவினராக வாழும் இனங்களில் ஒன்று தமிழினம். இரண்டு பிராமண இனம். இந்த இரண்டு இனங்களுக்கும் மதம் கிடையா. தமிழினத்திற்கு ஐந்திணை வாழ்க்கை முறை உண்டு. 

பிராமண இனத்திற்கு முந்தை பாஷ்து மொழியில் தொடங்கி நடப்பு ஹிந்தி மொழிவரை, ஆற்றங்கரை ஆற்றங்கரை என்று அவர்கள் நாடோடியாக அலைந்த வகைக்குப் பெற்ற, மாறுபட்ட பல மொழிகளும், மாறுபட்ட பல கலாச்சாரங்களும் உண்டு. இந்தக் கலவைக் கலாச்சாரத்திற்கு ஹிந்தி என்கிற கலவை மொழியைத் தந்தவர்களும் இந்தக் கலவை கலாச்சாரத்திற்கு ஹிந்து என்கிற மதத் தலைப்பைத் தந்தவர்களும் முகமதியர்கள் ஆவார்கள்.

வட இந்திய மக்களின் வாழ்க்கை முறைக்கு, முகமதியர்கள் இட்ட பெயரான ஹிந்துவை இன்று வரை மதம்கொண்டிராத தமிழினத்திற்கும், நம்மை ஆண்டிருந்த பிரித்தானியர்கள் நீட்டித்தார்கள். 

இதனால் பிறக்கும் ஒவ்வொரு தமிழனும் தமிழனாகவோ ஐந்திணை வாழ்க்கை முறைக்கு சொந்தக்காரனாகவோ அறியப்படாமல் ஹிந்து மற்றும் அதன் தமிழ்ஒலிப்பு இந்துவாக அறியப்படுகிற அவலம் இன்றுவரை தொடர்ந்து வருகிறது.

தமிழர்தம் ஐந்திணை வாழ்க்கை முறையில் அவர்கள் ஆற்றல் மூலங்களாக ஒரு கடவுளையும் நான்கு இறையையும் நிறுவியிருந்தனர். அந்த ஆற்றல் மூலங்களில் இருந்து கடவுள்கூறு தெய்வங்கள் இறைக்கூறு தெய்வங்கள் என பற்பல தெய்வங்களை வழிபாட்டு மூலமாக கொண்டாடியிருந்தனர்.

மிகக் குறைந்த எண்ணிக்கையில் முந்தை பாஷ்து மொழியோடு கைபர் போலன் கணவாய்கள் வழியாக முந்தை நாவலந்தேய இந்தியாவின் வடபகுதியை அடைந்திருந்த பிராமணர்கள், கடந்த 3500 ஆண்டுகளுக்கு மேலாக நடப்பு ஒட்டுமொத்த இந்தியத் தமிழர்களோடு கலந்து வாழும் வாய்பில் அவர்களுக்குக் கிடைத்த வாழ்க்கை முறையின் அடிப்படைகள் முழுக்க முழுக்க தமிழ்மக்களின் ஐந்திணை வாழ்க்கை முறையே.

நடப்பு வட இந்திய மக்களில் பேரளவினர் பேசும் ஹிந்திமொழி அவர்களுக்கு முகமதியர் வழங்கிய கொடையே. நடப்பு வடஇந்திய மக்கள் கொண்டாடும் ஹிந்துமதம் அவர்களுக்கு தமிழர் ஐந்திணை வாழ்க்கை முறை வழங்கிய கொடையே.

உலகினர் அனைவருக்கும் நடப்பு மொழி வேறுமொழியாகவும், மூலமொழி வேறு மொழியாகவுமே இருக்கும். காரணம்: தொடக்கத்தில் இருந்து அவர்கள் பல இனங்களாகப் பிரிந்தும் கலந்தும் ஒன்றின் மீது ஒன்று ஆதிக்கம் செலுத்தியும் முரண்பட்டும் வாழ்ந்த காரணம் பற்றியது ஆகும்.

உலகத்தோற்றம் குறித்து செய்திகளிலும் தமிழ்முன்னோர் நிறுவல் மாறுபட்டதாக அமைந்துள்ளது. உயிரின வளர்ச்சி என்பதிலும் மதங்கள் படைப்புக் கோட்பாட்டைக் கொண்டாட, இயல்அறிவு (சயின்ஸ்) ஒன்றிலிருந்து ஒன்று என்கிற பரிணாமம் என்கிற கோட்பாட்டை முன்மொழிகிறது. 

ஓறறிவு உயிரியில் இருந்து, ஆறறவு மனிதன் வரையிலான வளர்ச்சியை முந்தையதின் பட்டறிவுத் தரவின் தேடலில் அடுத்தடுத்த புலன்களை உயிரிகள் அடுத்தடுத்த அறிவாக தான்தோன்றியாக உருவாக்கிக் கொண்டன என்கிற கிளவியாக்கத்தை முன்மொழிகிறது தமிழியல்.

அதன் தொடர்ச்சியாக, மறுபிறப்பு என்கிற தலைப்பில் ஹிந்து மதம் பேரளவான புனைவுகளைக் கொண்டாடுகிறது. கூகுள் தேடலில் மறுபிறப்பு என்று தலைப்பிட்டுத் தேடினால் எட்டு இலட்சத்து முப்பத்தி யேழாயிரம் முடிவுகள் கிடைக்கின்றன. அத்தனையும் மறுபிறப்பு என்கிற தலைப்பில் ஹிந்து மதம் பேரளவாகக் கொண்டாடியிருக்கும் புனைவுகள் ஆகும்.

நடப்பு வடஇந்திய மக்கள் கொண்டாடும் ஹிந்துமதம் அவர்களுக்கு தமிழர் ஐந்திணை வாழ்க்கை முறை வழங்கிய கொடையே என்கிற அடிப்படையில் மறுபிறவி என்கிற தலைப்பில் தமிழ்முன்னோர் நிறுவியிருந்த செய்திகளில் முழுப்புரிதல் இல்லாமல் பேரளவான புனைவுகளை கட்டமைத்துக் கொண்டது ஹிந்து மதம்.

இயல்அறிவில் (சயின்ஸ்) மறுபிறவி குறித்து கிடைக்கிற செய்தி இதுதான். 
இயான் ஸ்டீவன்சன் மருந்தியல் முனைவர் (எம்.டி.) கனடாவைச் சேர்ந்த உயிர் வேதியியலாளர் மற்றும் மனநோயியல் பேராசிரியர் ஆவார். தன்னுடைய மறுபிறவி குறித்த இயல்அறிவு சார்ந்த  ஆராய்ச்சிகளுக்காக இவர் பெரிதும் அறியப்படுகிறார். 

2002 ஆம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெறும் வரை அவர் விர்ஜினியா பல்கலைக்கழகத்தில் இயல்பு கடந்தவை குறித்து ஆராயும் உணரியல் அறிவியல் பிரிவின் தலைவராக இருந்தார். 

மறுபிறவிக் கோட்பாடானது நவீன மருத்துவத்தில் மரபியல், மனித நடத்தை பற்றி மேலும் அறிய உதவும் என ஸ்டீவன்சன் நம்பினார். நாற்பது ஆண்டு காலம் அவர் உலகின் பல்வேறு இடங்களுக்குப் பயணித்து மறுபிறவியோடு தொடர்புடைய 3000 குழந்தைகள் குறித்து ஆய்வு செய்தார். இந்தியாவுக்கு வந்து ஆய்வு செய்ததில் மறுபிறவி நினைவுள்ள குழந்தைகள் பலர் இருப்பதை இயான் கண்டார்.

மனிதரில் காணப்படும் பிறவிக்குறைபாடு மற்றும் பிறவிக்குறிகளுள் 35 விழுக்காடு முற்பிறவியில் அந்த மனிதனுக்கு ஏற்பட்ட காயங்களோடு தொடர்புடையவையாய் இருப்பதைக் கண்டார். நாற்பதுக்கும் மேற்பட்ட நபர்களில் பழைய மருத்துவ ஆவணங்களை ஆய்வு செய்ததில் இயானின் ஆய்வு உண்மையெனக் கொண்டாடப்பட்டது.

முன்பிறவி நினைவுகள் குழந்தைப் பருவத்திலேயே பெரும்பாலும் ஏற்படுகின்றன என்று இயான் கண்டார். இரண்டு முதல் ஐந்து அகவை வரையிலான குழந்தைகள் தங்கள் முன்பிறவி நினைவுகளை நன்கு நினைவு கூர்வதையும் அக்குழந்தைகளின் பேச்சு மற்றும் நடத்தை அகவை மற்றும் அவற்றின் குடும்பத்திற்கு ஒவ்வாததாயும் ஆனால் அக்குழந்தையும் முன்பிறப்போடு ஒத்துப் போவதையும் இயான் கண்டார். நாட்கள் செல்லச் செல்ல குழந்தைகள் இவற்றை மறந்து விடுவதையும் இயான் கண்டார்.

இயான் பல்கலைக்கழகத்தில் உள்ள தனது துறை அலுவலகத்தில் பேழை ஒன்றைப் பூட்டினார். இப்பூட்டைத் திறப்பதற்கான வழி அவருக்கு மட்டுமே தெரியும். தான் இறந்த பின் ஏதேனும் ஒரு வகையில் தொடர்பு கொண்டு அப்பூட்டைத் திறக்க முடியுமென அவர் நம்பினார்.

ஹிந்துத்துவாவும், இயானும் உயிர் தனியான ஒன்று என்று கருதுவதால் இந்த வகையான கருதுகோளை அவர்கள் முன்னெடுக்கின்றனர்.

தமிழ்முன்னோரோ- உயிர் என்பது ஒரு கூட்டியக்கம். இறப்பில் உயிர் என்கிற கூட்டியக்கம் சுழியமாகிறது. அந்தச் சுழியம் என்பது தரவு மட்டுமே. உயிர்- அடுத்த எந்த உயிரியிலும் தொடர முடியாது என்று தெளிவாக விளக்குகின்றனர். அந்தத் தெளிவை இந்த இரண்டு கட்டுரைகளில் விளங்கிக் கொள்ளலாம்.

1. உலகம் முதலில் எப்படி தோன்றியது? முதல் மனிதன் உருவானது எப்படி?

2. இறத்தல், காலமாதல் என்கிற பொருள் பொதிந்த சொற்களில்! உடல் இறையாகிறது. உயிர் காலமாகிறது என்று நிறுவியுள்ளனர் தமிழ் முன்னோர்

உடல் அழியவே அழியாது. அது இரண்டு வகையில் மீண்டும் மீண்டும் பிறந்து கொண்டேயிருக்கும். இந்தச் செய்தியை விரிவாகப் புரிந்து கொள்ள மேற்கண்ட இரண்டு கட்டுரைகளில் அதற்கான அடிப்படை இருக்கும்.

உலகில் தோன்றிய எந்த இனமும்- பரிணாமம் முன்மொழிவது போன்ற- இனஅடையாளத்தை இழக்கும் எந்த வாய்ப்பிலும் எளிதாகக் கரைந்து விடுவதில்லை. அதனாலேயே எல்லா இனத்திற்கும் இனப்பெருக்கம் என்கிற ஒரு நடைமுறை இருக்கிறது.

அந்த இனப்பெருக்கம் இரண்டு வகையாக நிகழ்கிறது ஒன்று கலவியிலா இனப்பெருக்கம். மற்றொன்று கலவி இனப்பெருக்கம். இந்த இரண்டு வகையும் ஒவ்வொரு இனத்தின் மறுபிறப்பாகும். 

ஒவ்வொரு உயிரிக்கும் குறிப்பிட்ட காலக்கெடு உள்ளது. அந்தக் காலக்கெடு அந்த உயிரியில் அமைந்த உள்ளெண்ணிக்கை அடிப்படையானது. 

மனிதன் 120 ஆண்டுகள் வாழமுடியும் என்பது மனித உள்ளெண்ணிக்கை அடிப்படையானது. வௌ;வேறு மனிதர்களின் காலக்கெடுவை வேறுவேறாக நம்முடைய முயற்சியில் நாம் அமைத்துக் கொள்கிறோம்.
மனிதனில் கலவி இனப்பெருக்கத்தில் ஒரு தலைவியும் தலைவனும் தன் பிள்ளைகளில் மறுபிறப்பு எடுக்கின்றனர்.
தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப்ப படும்.
பெற்றோரின் இயல்பு அவர்களின் பிள்ளைகளில் தொடர்வதற்கு இந்த மறுபிறப்பு காரணம் ஆகிறது.

கலவி இனப்பெருக்கமோ, கலவியிலா இனப்பெருக்கமே முன்னெடுத்த பிறகோ, முன்பாகவோ ஒவ்வொரு உயிரியும் இறத்தலில் இறையாகிப் போனபோதும் முந்தைய உயிரியின் கூட்டியக்கத்தின் பதிவுகளையும் எடுத்து வருவாதாலேயே ஓரறிவு உயிரிகள் இறையாகிப் போனதில் உருவான நிலம் நீர் தீ காற்று என்கிற நாற்திரங்களை உணவாக்கிக் கொண்ட புத்தினங்கள் ஈரறிவு உயிரியாக கிளைக்க முடிகிறது. இது பரிணாமம் அல்ல. இதைக் கிளவியாக்கம் என்கின்றனர் தமிழ்முன்னோர்.

ஐரோப்பிய இயல்அறிவு (சயின்ஸ்) நிறுவும் பரிணாமத்தில் ஒரு உயிரியில் இருந்து இன்னொரு உயிரி வந்ததாக ஒப்புக் கொள்ளப்படுகிறது.

தமிழ்முன்னோரின் இயல்கணிப்பு நிறுவும் கிளவியாக்கத்தில் ஒரு உயிரியின் வாழ்க்கைப் பதிவு இறத்தலில் கிளைத்த அடுத்த உயிரியில் இரண்டாவது அறிவு தான்தோன்றியாக உருவாவதற்கான வாய்ப்பு அமைவதாக பேசப்படுகிறது.

ஓரறிவு உயிரியில் மட்டுமே வெட்டி நட்டால்- துண்டுபட்டு விழுந்தால்- முளைக்கும் என்பதான கலவியிலா இனப்பெருக்கத்தை மறுபிறப்பாகக் காணமுடியும். ஈரறிவுக்கு மேற்பட்ட உயிரிகளில் கலவியலா இனப்பெருக்கமோ மறுபிறப்போ சாத்தியமே இல்லை.  
தலைவனும் தலைவியும் இணைந்து பிள்ளைகளில் மறுபிறப்பு எடுக்கின்றனர். 

முதலெனப்படுவது இடமும் காலமும் என்கிற தலைப்பிலேயே ஒன்றித்தலால் மட்டுமே அடுத்தடுத்த வளர்ச்சி சாத்தியம். ஐரோப்பிய இயல்அறிவு சுட்டும் எந்தப் பிரிதலிலும் புத்தியக்கம் சாத்தியம் இல்லை என்பதை தமிழியலை முழுமையாக உள்வாங்கினால் தெளிவாகப் புரிந்து விடும்.

ஆக கடந்த பிறவியில் கழுதை இந்தப் பிறவில் மனிதன் என்பது எல்லாம் முழுக்க முழுக்க அறிவுக்குப் பொருந்தாது கற்பனை மட்டுமே. எண்ணிக்கை மாற்றமே இயல்பு மாற்றத்திற்கு அடிப்படை. ஒன்றித்தல் இல்லாமல் புத்தியக்கம் கிடையாது என்பது உறுதியான உண்மை.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,840.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.