Show all

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உருவ பொம்மையை மீட்ட காவல்துறையினர்

11,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து, சேலத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மறைத்து வைத்திருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உருவ பொம்மையை அவர்கள் எரிக்க முயன்றனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உருவ பொம்மையை போராட்டக்காரர்களிடமிருந்து மீட்டனர். சேதமடைந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உருவ பொம்மையை ஒழுங்கு படுத்தி எடுத்துச் சென்றனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,798. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.