20,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பதினெட்டு சட்டமன்றஉறுப்பினர்கள் தகுதிநீக்க வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என தினகரன் தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் நேற்று சென்னை உயர்அறங்கூற்றுமன்றத்தில் தலைமைப் பதிவாளரிடம் மனு அளித்தார். இதையடுத்து, 3-வது அறங்கூற்றுவர் சத்யநாராயணன் முன்பு இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கையில்லை எனக் கூறி, தினகரன் ஆதரவு சட்டமன்றஉறுப்பினர்கள் 18 பேர் ஆளுநரிடம் மனு அளித்தனர். இதையடுத்து, ஆளுநரிடம் மனு அளித்த சட்டமன்றஉறுப்பினர்கள் 18 பேர்களை பேரவைத் தலைவர் தகுதிநீக்கம்செய்து உத்தரவிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தகுதிநீக்கம் செய்யப்பட்ட சட்டமன்றஉறுப்பினர்கள்; சார்பில், சென்னை உயர்அறங்கூற்றுமன்றத்தில் மனு பதிகை செய்யப்பட்டது. இந்த வழக்கு, இருபது நாட்களுக்கு முன்பு உயர் அறங்கூற்றுமன்ற தலைமை அறங்கூற்றுவர் இந்திரா பானர்ஜி மற்றும் அறங்கூற்றுவர் சுந்தர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அறங்கூற்றுவர்கள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கினர். இதையடுத்து, இந்த வழக்கில் 3-வது அறங்கூற்றுவர் விசாரிப்பார் என அறிவிக்கப்பட்டு, அறங்கூற்றுவர் விமலா நியமிக்கப்பட்டார். 3-வது அறங்கூற்றுவர் மீது நம்பிக்கையில்லை எனக் கூறி தகுதிநீக்கம் செய்யப்பட்ட சட்டமன்றஉறுப்பினர்கள உச்ச அறங்கூற்றுமன்றத்தை நாடினர். மேலும், பதினெட்டு சட்டமன்றஉறுப்பினர்கள் தகுதிநீக்க வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என தினகரன் தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் நேற்று சென்னை உயர்அறங்கூற்றுமன்றத்தில் தலைமைப் பதிவாளரிடம் மனு அளித்தார் இவைகளையடுத்து, 3-வது அறங்கூற்றுவராக அறிவிக்கப்பட்ட அறங்கூற்றுவர் விமாலாவுக்குப் பதிலாக அறங்கூற்றுவர் சத்யநாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார் 3-வது அறங்கூற்றுவர் சத்யநாராயணன் முன்பு இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,838.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



