Show all

மவுனத்தை கலைத்தார் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் நட்ராஜ்

எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு அளிப்பதாக மயிலாப்பூர் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் நட்ராஜ் கூறியுள்ளார். ஒருவாரத்துக்கு மேல் மவுனமாக இருந்த நட்ராஜ் இன்று மவுனத்தைக் கலைத்துள்ளார்.

     சசிகலா ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் சுமார் 130 பேர் கூவத்தூரில் உள்ள சொகுசு மாளிகையில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். ஆனால், நட்ராஜ் அங்கு செல்லவில்லை. இதனிடையே, பத்து சட்டமன்ற உறுப்பினர்கள், முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். ஆனால், மயிலாப்பூர் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் நட்ராஜ், யாருக்கு ஆதரவு என்று தெரிவிக்காமல் மவுனமாகவே இருந்தார். இதனிடையே, எடப்பாடி பழனிச்சாமிக்கு, நட்ராஜ் ஆதரவு அளிப்பதாக தகவல் வெளியானது.

     இது குறித்து நட்ராஜிடம் கேட்டபோது, ‘கட்சி உடையக்கூடாது. பெரும்பான்மை எங்கே இருக்கிறதோ அங்கு நான் இருப்பேன்’

என்று கூறினார்.

     தற்போது, 120க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.